Agricultural

 

KVIC விவசாய லோன்கள்


KVIC  (மத்திய அரசின் கதர் கிராமத்தொழில்கள் ஆணையம்)  விவசாய லோன்கள்  

KVIC அமைப்பு 
கிராமபுற வேலை வாய்ப்புகளை  அதிகபடுத்த  மற்றும்  சிறு தொழில் செய்வோரை மேலும்  மேலும் ஊக்குவிக்க பல்வேறு விதமான கடன்களை வழங்குகிறது.அதிகபட்சமாக 30% மானியத்துடன் 25 லட்சம் வரை கடன் பெற இயலும்.ஆனால் செய்யப்படும் தொழில்கள் KVIC அங்கிகாரம் பெற்ற தொழில்களாக இருக்க வேண்டும். நீங்கள்  செய்கிற தொழில் கிழே கொடுக்கபட்டுள்ள அட்டவணையில் உள்ள ஒன்றாக இருக்க வேண்டும்.

என் நண்பர் ஒருவர் KVIC மூலம் கடன் பெற்று "பிளாஸ்டர் ஆப் பாரிஸ்" செய்து வருகிறார். கடன் பெறுவது தொடர்பாக ஏதவாது உதவி வேண்டும் என்றால் இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும் . 9659210289



விவசாயம் சார்ந்த தொழில்கள்

--------------------------------------------
தேனீ வளர்த்தல்,கத்தாழை வளர்த்தல்,பசை, பிசின் தயாரித்தல்,அரக்குத் தயாரித்தல்,மூங்கில் கூடை செய்தல்,விளக்குமாறு, வெட்டிவேர் தட்டி செய்தல்,வன விளை பொருட்கள் சேகரித்தல், பதனிடுதல்,போட்டோ பிரேம்
நெட்டி வேலை. நெட்டி மாலைகள் செய்தல்,இலையினால் செய்யப்படும் கிண்ணங்கள்,வனத்திலிருந்து கிடைக்கும் மூலிகைச்செடிகள் சேகரித்தல்






தா
துப் பொருள்கள் சார்புத் தொழில்கள் பற்றிய அட்டவணை
---------------------------------------------------------------------------------------------------------------

1. மண்பாண்டம் தயாரித்தல்

2. கிளிஞ்சல் மற்றும் சுண்ணாம்பு
3. கல்வெட்டுதல், ஜல்லி அரைத்தல், செதுக்குதல் (கட்டிடம் மற்றும் கோயிலுக்கு)
4. கல்லில் செய்யப்படும் பயன்பாட்டுப் பொருட்கள்
5. சிலேட்டு மற்றும் சிலேட்டுப் பென்சில் செய்தல்
6. பிளாஸ்டர் ஆப் பாரிஸ் தயாரித்தல்
7. பாத்திரம் கழுவும் பவுடர்
8. எரி பொருளாகப் பயன்படும் கரி
9, தங்கம், வெள்ளி மற்றும் விலையுயர்ந்த செயற்கை கற்களால் செய்யப்படும் ஆபரணங்கள்
10.  கோலப்பொடி
11. வளையல்
12. பெயிண்ட், வார்னிஷ், டிஸ்டம்பர் மற்றும் கலர் பொடிகள்
13. கண்ணாடிப் பொம்மைகள்
14. கண்ணாடி அலங்காரத் தொழில்
15. செயற்கை வைரம் கட்டிங்
வன
ம் சார்ந்த தொழில்கள்
16. தேனீ வளர்த்தல்
17. கத்தாழை வளர்த்தல்
18. பசை, பிசின் தயாரித்தல்
19. அரக்குத் தயாரித்தல்
20. மூங்கில் கூடை செய்தல்,
21. விளக்குமாறு, வெட்டிவேர் தட்டி செய்தல்
22. வன விளை பொருட்கள் சேகரித்தல், பதனிடுதல்
23. போட்டோ பிரேம்
24. நெட்டி வேலை. நெட்டி மாலைகள் செய்தல்
25. இலையினால் செய்யப்படும் கிண்ணங்கள்
26. வனத்திலிருந்து கிடைக்கும் மூலிகைச்செடிகள் சேகரித்தல்
கையால் செய்த 
காகிதம் மற்றும் ார்ப்பொருட்கள்
27. கைக்காகிதம்
28. காகிதத்தினால் செய்யப்படும் தட்டு, கிண்ணம் பை மற்றும் அட்டை பெட்டிகள்
29. புத்தக பைண்டிங் கவர், நோட்புக் செய்தல்
30. சணற் பொருட்கள் (நூல் தவிர)
31. கயிறு மற்றும் நார்பொருட்கள்
வேளாண்
சார்ந்த உணவுப் பொருட்கள் / சார்புத் தொழில்கள் 
32. அரிசி, பருப்பு மற்றும் தானியங்கள் பதனிடுதல் / மசாலா பவுடர் / அப்பளம் / ரொட்டி பேக்கரி பொருட்கள் செய்தல்
33. இடியாப்பம்
34. சமையல் எண்ணெய் தயாரித்தல்
35. கோதுமை, ரவை தயாரித்தல்
36. சிறிய ரைஸ் மில்
37. பனை பொருட்கள் / பனை வெல்லம்
38. கரும்பு வெல்லம் / கண்டசாரி சர்க்கரை செய்தல்
39. மிட்டாய், தின்பண்டம் தயாரித்தல்
40.  கரும்புச்சாறு செய்தல்
41. கேழ்வரகு, மக்காச்சோளப் பொருட்கள் தயாரித்தல்
42. முந்திரிப்பருப்பு தயாரித்தல்
43. பால்பொருட்கள் தயாரித்தல்
44. மாட்டுத் தீவனம் / கோழித் தீவனம் தயாரித்தல்
பாலிம
ர் மற்றும் ரசாயண சார்புத் தொழில்கள்
45. தீப்பெட்டி
46. அகர்பத்தி
47. பட்டாசு
48. தோல் பதனிடுதல்
49. சோப்பு தயாரித்தல்
50. ரப்பர் பொருட்கள்
51. ரெக்ஸின்
52. பி.வி.சி. பொருட்கள்
53. கொம்பு, எலும்பு, தந்தப் பொருட்கள்
54. மெழுகுவர்த்தி, சூடம் மற்றும் அரக்கு
55. பிளாஸ்டிக் பொருட்கள்
56. பொட்டு தயாரித்தல்
57. மருதாணி தயாரித்தல்
58. வாசனைத் தைலம் தயாரித்தல்
59. ஷாம்பு தயாரித்தல்
60. ஹேர் ஆயில்
61. டிடர்ஜெண்ட், சலவை பவுடர்
பொறியியல்
மற்றும் மரபு சார எரிசக்தி
62. தச்சுவேலை
63. இரும்பு வேலை
64. அலுமினியப் பாத்திரங்கள்
65. சாண எரிவாயு
66. கழிவுப் பொருட்கள் மூலம் இயற்கை உரம் உற்பத்தி செய்தல்
67. பேப்பர் பின், ஸ்டவ் பின், ஊக்கு, கிளிப்புகள் தயாரித்தல்
68. அலங்கார பல்புகள், கண்ணாடிக்குடுவைகள் மற்றும் கண்ணாடி
69. குடை தயாரித்தல்
70. சூரிய ஒளி மற்றும் காற்றினால் இயங்கும் கருவிகள்
71. பித்தளைப் பாத்திரங்கள்
74. பாத்திரம் இல்லாத பித்தளை, செம்பு, வெண்கலப் பொருட்கள்
75. ரேடியோ
76. கேஸட் பிளேயர் ரேடியோவுடன்/ரேடியோ இல்லாமல்
77. வோல்டேஜ் ஸ்டெபிலைசர்
78. எலக்ட்ரானிக் கடிகாரம் மற்றும் அலாரம் கடிகாரம்
79. கேஸட் ரெக்கார்டர் ரேடியோவுடன்/ரேடியோ இல்லாமல்
80. மரத்தினால் செய்யப்படும் அழகுப் பொருட்கள்
81. தகரப் பொருட்கள்
82. வயர் நெட்
83. இரும்பு கிரில்
84. மோட்டார் வைண்டிங்
85. வண்டி, மாட்டு வண்டி, சிறிய படகுகள் தயாரித்தல், சைக்கிள், சைக்கிள் ரிக்ஷா, மோட்டார் பொருத்தப்பட்ட வண்டிகள் அசெம்பிளிங்
86. இசைக்கருவிகள் தயாரித்தல்
ஜவுளி
தொழில் (கதர் நீங்கலாக) மற்றும் பிற தொழில்கள்
87. பாலிவஸ்திரா
88. லோக்வஸ்திரா
89. பனியன்
90. ரெடிமேட் துணிகள் தயாரித்தல் / டெய்லரிங்
91. பொம்மை தயாரித்தல்
92. சாயம் / சாய அச்சுத் தொழில்
93. கம்பளி மற்றும் நூல்கண்டுகள்
94. எம்பிராய்டரி
95. மருத்துவத் துறைக்கானபேண்டேஜ்கள்
96. ஸ்டவ் திரிகள்
97. எம்பிராய்டரி செய்யப்பட்ட துணிகள்
98. லாண்டரி /  சலவையகம்
99. பார்பர் / முடித்திருத்தகம்
100. பிளம்பிங்
101. வீட்டில் பயன்படும் எலக்ட்ரானிக் பொருட்கள் பழுதுபார்த்தல்
102. டயர் வல்கனை சிங்
103. பம்ப்செட், டீசல் எஞ்சின் பழுதுபார்த்தல்
104. விவசாயப் பொருட்களுக்கான ஸ்பிரேயர், பூச்சி மருந்து பம்ப்செட்டுகள் பழுதுபார்த்தல்
105. ஒலி, ஒளி அமைப்புகளுக்கான ஒலி பெருக்கி, ஆம்பிளிபையர், மைக் போன்றவை வாடகைக்கு விடுதல்
106. பேட்டரி சார்ஜ் செய்தல்
107. பேனர் / கலைத்தட்டிகள் வரைதல்
108. சைக்கிள் ரிப்பேர் கடை
109. கட்டிட வேலைகள்
110 பேண்ட் வாசிக்கும் குரூப்கள்
111. மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகள் (பைபர் கிளாஸ்)
112. வாடகைக்கு விடப்படும் மோட்டார் சைக்கிள்
113. இசைக்கருவிகள்
114 உணவகம் (மதுபானம் நீங்கலாக)
115. தேனீர் விடுதி
116. அயோடின் கலந்த உப்பு

மேலும் தகவல் பெற http://www.kvic.org.in

காளான் உற்பத்தி!

காளான் உற்பத்தி செய்வது என்பது ஒரு கடினமான வேலையில்லை. காளான் உற்பத்தி செய்ய ஓரளவுக்கு படித்திருந்தாலே போதும். வருடம் முழுவதும் உற்பத்தி செய்யலாம். ஆனால் கோடை காலத்தில் 30 -40% மகசூல் குறைவாக கிடைக்கும்.
சிப்பிக்காளான் கடல் சிப்பியின் தோற்றமுடையதாய் இருப்பதால்தான் இவற்றுக்கு இந்த பெயர் வந்தது. பொதுவாக சிப்பிக் காளானில் வைட்டமின் பீ அதிகமாக இருப்பதால் இதயம் சம்பந்தமான நோய்களை குணப்படுத்துகிறது. வைட்டமின் பீ-ல் உள்ள போலிக் ஆசிட் அதில் இருப்பதால் ரத்தசோகை நோய்க்கு நல்லது. நார்ச்சத்து உள்ளதால் நாம் உண்ணும் உணவுகள் நன்றாக செரிமானம் அடைய நிவாரணியாக செயல்படுகிறது. வயிற்றுப்புண்களை குணப்படுத்துகிறது. வயோதிகப்பருவத்தில் ஏற்படும் கால் மூட்டுவலிகளை மிக அற்புதமாக சிப்பிக்காளான் குணப்படுத்துகிறது. சிறந்த கண்பார்வைக்கும் எலும்புகளின் வளர்ச்சிக்கும் பற்களின் உறுதிக்கும் தேவையான தாமிர, இரும்பு சத்துகளுடன் கூடிய கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற தாதுக்களும் காளானில் உள்ளன. ஒரு மனித உடலுக்கு எவை எவை எநத எந்த அளவுக்கு தேவைப்படுமோ அந்த அளவிற்கு சத்துப் பொருட்கள் சிப்பிக்காளானில் உள்ளது. எனவே சிப்பிக்காளான் ஒரு முழுமையான உணவாகும். சிறியவர் முதல் பெரியவர் வரை சிப்பிக்காளானை வாரம் இருமுறை உணவில் சேர்த்து உண்ணலாம். சிப்பிக்காளானை அடிக்கடி உணவில் சேர்த்து உண்பதால் வயோதிகப்பருவத்தை தள்ளிப்போடுகிறது. இளமையை அள்ளித்தருகிறது.
வைக்கோல் தயாரிப்பு: காளான் வளர்ப்பதற்கு நெல் வைக்கோலைக் கொண்டு உருளை படுக்கைகள் தயாரிக்க வேண்டும். புதிய நெல் வைக்கோலை 5 செ.மீ. நீளத்திற்கு வெட்டி, 4-5 மணி வரை நீரில் ஊறவைக்க வேண்டும். பிறகு வைக்கோலை நன்கு கொதிக்கும் நீரில் ஒரு மணிநேரம் வேகவிட வேண்டும். பின் வைக்கோலை அகற்றி உலர்த்திக் கொள்ள வேண்டும்.
காளான் படுக்கை தயாரித்தல்: 2க்கு 1 அடி அளவுக்கு 80 காஜ் கனமுள்ள பாலிதீன் பைகளில் அடுக்கு முறையில் காளான் விதையிடப்பட்ட படுக்கைகள் தயாரிக்கப் படுகிறது. பாலிதீன் பையின் அடிப்பகுதியை சணலால் கட்டி அதை உள்பக்கமாக திருப்பிவிட வேண்டும். பையின் அடிப்பகுதியில் 5 செ.மீ. உயரத்திற்கு வைக்கோல் துண்டுகளை பரப்பி அதன் மேல் 30 கிராம் காளான் வித்தை தூவ வேண்டும். இதே போல் 4 அடுக்குகள் தயாரித்து மேல்பகுதியில் 5 எச்.மீ. வைக்கோல் பரப்பி, பையின் வாய்பகுதியை சணலால் இறுக்க கட்டவேண்டும். பாலிதீன் மையப்பகுதியில் பென்சில் அளவுள்ள 5-10 துளைகள் போடவேண்டும்.
காளான் வித்து பரவும் முறை: மேற்கூறிய முறையில் தயாரிக்கப்பட்ட உருளைப் படுக்கைகளை வயரில் கட்டி தொங்கவிட வேண்டும். படுக்கையில் பூசண விதைகள் பரவுவதற்கு 15 நாட்கள்ஆகும். பின் படுக்கைகளைக் காளான் தோன்றும் அறைக்கு மாற்ற வேண்டும்.
காளான் அறை: காளான் பூசணம் முழுமையாக பரவி ஒரு வாரத்திற்குள் பையைக் கிழித்துக்கொண்டு வெளியே வரும். காளான் மொட்டு தோன்றிய மூன்று நாட்களில் பெரியதாகிவிடும். அவற்றை அறுவடை செய்த பின் பாலிதீன் பையை நீக்கிவிட வேண்டும். அறையின் வெப்பநிலை, ஈரப்பதத்தை தேவையான அளவு பராமரிக்க மணலில் தண்ணீர் தெளிக்கவும்.
காளான் அறுவடை : காளான்களை அறுவடை செய்தபின் படுக்கைகள் மீது தண்ணீர் தெளிக்க வேண்டும். ஒரு வார இடைவெளியில் மீண்டும் காளான் அறுவடைக்கு வரும். இதுபோல் 3 முறை அறுவடை செய்யலாம். ஒரு படுக்கை தயார் செய்ய 500 கிராம் வைக்கோல் பயன்படுத்தினால் 900  கிராம் மகசூல் கிடைக்கும். மேற்கூறிய முறையில் காளான் வளர்ப்பு செய்து அதிக மகசூல் பெற்று விவசாயிகள் பயனடையலாம்.
தொடர்புக்கு:
பாண்டியன்,
அகல்யா பார்ம்ஸ், 92832 52096.
 -கே.சத்தியபிரபா, 96591 08780.

கிசான் கால் சென்டர்

தமிழ்நாடு அரசு மற்றும் மதிய அரசு இணைந்து  செயல் படுத்தும் கிசான் கால் சென்டர் (kisan call center) மூலம்,விவசாயம் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும்,சந்தேகங்களுக்கும் பதில் பெறலாம். மேலும் விவசாய லோன்கள்,பயிர் காப்பிடு போன்ற தகவல்களையும் பெற முடியும்.


toll free number  -
18001801551

மேலும் இது தொடர்பாக தெரிந்து கொள்ள http://agritech.tnau.ac.in/kisan/kisan.html

புதிய நவீன விவசாய முறைகளை பற்றி அறிய...

1. Agricultural Research Station Bhavanisagar - 628 501,
Ph : 04295 – 240244, 240032

2. Agricultural Research Station, Kovilpatti – 627 701,
Ph : 04632 - 234955

3. Agricultural Research Station, Vaigai Dam-625 512
Ph : 04546 –244112

4. Agricultural Research Station, Paramakudi – 623 707,
Ph : 04564 – 222139

5. Agricultural Research Station, Tirupathisaram – 629 901,
Ph : 04652 – 276728

6. Rice Research Station, Tirur – 602 025,
Ph : 044 – 27620233

7. Rice Research Station, Ambasamudram – 627 401,
Ph : 04634 – 250215

8. Coastal Saline Research Centre, Ramanathapuram – 623 501,
Ph : 04567 – 230250, 230359

9. Regional Research Station, Kovilankulam, Aruppukottai - 626 107,
Ph : 04566 - 220562

10. Agricultural Research Station, Virinjipuram – 632 104,
Ph : 0416 - 2272221

11. Agricultural Research Station, Pattukottai – 614 602,
Ph : 04373 - 235832

12. Hybrid Rice Evaluation Centre, Gudalur – 643 212,
Ph : 04262 - 264945

13. Oilseeds Research Station, Tindivanam – 602 002,
Ph : 04147 – 250293

14. Sugarcane Research Station, Cuddalore – 607 001,
Ph : 04142 - 220630

15. Sugarcane Research Station, Sirugamani – 639 115,
Ph : 0431 - 2614217

16. Sugarcane Research Station, Melalathur – 635 806,
Ph : 04171 - 220275

17. Soil and Water Management Research Institute, Thanjavur – 613 501.
Ph : 04362 - 2267680

18. Coconut Research Station, Veppankulam – 614 906,
Ph : 04373 - 260205

19. Coconut Research Station, Aliyarnagar – 642 101,
Ph : 04253 - 288722

20. Cotton Research Station, Srivilliputhur – 626 125,
Ph : 04563 - 260736

21. Regional Research Station, Paiyur – 635 112,
Ph : 04343 - 290600

22. Regional Research Station, Virudhachalam – 606 001,
Ph : 04143 - 238231

23. National Pulses Research Centre, Vamban – 622 303,
Ph : 04322 - 209692

24. Tamil Nadu Rice Research Institute, Aduthurai – 612 101,
Ph : 0435 - 2472108

25. Tapioca and Castor Research Station, Yethapur – 636 117,
Ph : 04282 - 221901

26. Horticultural Research Station, Pechiparai – 629 161,
Ph : 04651 – 281191, 281192, 281759

27. Horticultural Research Station, Thadiyankudai – 624 602,
Ph : 04542 - 224225

28. Horticultural Research Station, Yercaud – 636 602,
Ph : 04281 - 222234

29. Institute of Commercial Horticulture, Uthagamandalam – 643 001,
Ph : 0423-2442170

30. Horticultural Research Station, Kodaikanal – 624 103,
Ph : 04542 - 240931

31. Vegetable Research Station, Palur – 607 113,
Ph : 04142 - 275222

32. Urban Horticulture Development Centre, Chennai – 600 040,
Ph : 044 – 26263484

33. Cotton Research Station, Veppanthattai - 621 116, Perambalur District.
Ph : 04328 293503

34. Maize Research Station, Vagarai- 624 613, Dindigul District
Ph : 04545 292910

மரக்கன்றுகள் வீடு தேடி வர sms to 91 9894062532

இந்த எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் போதும். மரக்கன்று இரண்டு வாரத்திற்குள் எஸ்.எம்.எஸ் அனுப்பியவரின் வீடு தேடி வரும்.அவர்களின் வீடு, அதன் சூழல், போன்றவற்றை ஆராய்ந்து, மரக்கன்றை நட்டு, பின்னர் பராமரிக்கும் முறை பற்றி விளக்குவார்கள், அந்த மரத்திற்கு அவர்களுக்கு விருப்பமான குழந்தையின் பெயரை சூட்டுவார்கள்,""குழந்தைகளின் பெயர்களை மரங்கன்றுகளுக்கு சூட்டுவதன் மூலமாக, அந்த மரக்கன்றை தங்கள் குழந்தையைப் போலவே பராமரிப்பார்கள் என்கிறார்கள் சென்னை 'நாளந்தா' சமுதாய சேவை அமைப்பின் நிர்வாகிகள். அது மட்டுமின்றி, இந்த அமைப்பின் உறுப்பினர்களின் திருமண விழாக்களில், தாம்பூலப்பைகளுக்கு பதிலாக, மரக்கன்றுகளை வழங்கி, இயற்கை குறித்த விழிப்புணர்வு செய்கிறது.

[சென்னை மட்டும்]


பிசினஸ்...100. சூப்பர் டிப்ஸ்...

சூப்பர் டிப்ஸ்...
''அம்மா, நான் படிக்கறதை நிறுத்திட்டு, பிசினஸ் பண்ணி சம்பாதிக்கப் போறேன்!''

''என்னது... படிப்பை நிறுத்தப் போறியா...? படிக்கறது

நாலாங்கிளாஸ். அதை நிறுத்திட்டு என்ன பிசினஸ் பண்ணிக் கிழிக்கப் போற?''
''மூணாங்கிளாஸ் பசங்களுக்கு டியூஷன் எடுக்கப்போறேன்!''

- என்ன... படித்ததுமே 'குபுக்' என்று சிரிப்பு பொங்கிக் கொண்டு வருகிறதா? கூடவே, இந்த 'எஸ்.எம்.எஸ்' ஜோக் புறப்பட்டதன் அடிநாதம்... இந்த உலகமே பிசினஸ் எனும் ஒரு புள்ளியை மையமாக வைத்துதான் சுழன்று கொண்டிருக்கிறது என்பதும் புரிந்திருக்குமே!

ஆம், எடுத்ததெல்லாம் பிசினஸ் என்பதாகிக் கொண்டிருக்கும் 'பிசினஸ் பெருங்காலத்தில்' நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆதிமனிதனின் மட்பாண்டத்தில் ஆரம்பித்து, இன்றைய இன்டர்நெட் வரை எதை எடுத்தாலும் பிசினஸ்தான். இத்தகைய சுற்றுச்சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களுக்கு, தோள் கொடுக்கும் உற்ற தோழிதான் இனி படையெடுக்கும் அத்தனை டிப்ஸ்களும்!

இணையதளம்...அது உங்கள் களம்!

1. விளம்பரத்துறை அளிக்கும் வாய்ப்புகள் எக்கச்சக்கம். கற்பனை வளம்மிக்க வாசகங்கள் எழுதுவோர் 'ஃப்ரீலான்சர்' (Freelancer) என்ற வகையில் காப்பிரைட்டராக விளம்பர ஏஜென்சிகளுடன் பணியாற்றலாம். மிகப்பெரிய நிறுவனங்கள்கூட அவர்களுடைய தமிழ் விளம்பரங்களில் ஏடாகூடமாகத் தடுமாறியிருப்பதை அடிக்கடி காண முடியும். இதிலிருந்தே நல்ல தமிழ், கற்பனை வளம், சந்தைப்படுத்துதல் பற்றிய புரிதல்... இவை மூன்றும் இருப்பவர்களுக்கு எத்தனை வாய்ப்புகள் உள்ளன என்பதைப் புரிந்து கொள்ளலாம். www.freelanceindia.com என்ற இணையதளத்தில் நம்மைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்வது இப்படிப்பட்ட வாய்ப்புகள் நம்மைத் தேடிவர உதவும்.

2. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் இணையதளத்தை, இணையத்தில் பிரபலமாக்கும் வித்தைதான் எஸ்.இ.ஓ. (SEO-Search Engine Optimisation) அதிகம் பிரபலமாகாத... ஆனால், வேகமாக வளர்ந்து வரும் துறை இது. முறையான பயிற்சி பெற்றால், துணிந்து களம் இறங்கலாம், இணையவெளிக்குள்! இதைப் பயிற்றுவிக்கும் இணையம் மூலமாகவே ஏகப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. நல்ல நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்!

3. வலைப்பூ... ஒரு வரப்பிரசாதம். அதாங்க நெட்ல பிளாக் எழுதுவது. 'பொழுது போகாதவர்களின் இணைய விளையாட்டு அது!' என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அதை இப்போதே மாற்றிக் கொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த வல்லுநராக நீங்கள் இருந்தாலோ, அல்லது குறிப்பிட்ட எந்த விஷயத்தின் மீதாவது தீவிர ஆர்வம் உடையவராக இருந்தாலோ இன்றே தொடங்குங்கள் ஒரு வலைப்பூ. போதுமான அளவு பார்வையாளர்கள் உங்கள் வலைப்பூவுக்கு உருவாகிவிட்டால், தங்கள் நெட்வொர்க்கில் வந்து இணையுமாறு உங்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப் போவது யார் தெரியுமா... சாட்சாத் கூகுள்! ஆம், தன்னுடைய வாடிக்கையாளர்களின் விளம்பரத்தை உங்கள் வலைப்பூவில் கூகுள் கொண்டு வந்து சேர்க்கும். இதற்கு பிரதிஉபகாரமாக, தன்னுடைய விளம்பர வருமானத்தில் உங்களுக்கு விகிதாச்சார பங்கு வைக்கும் கூகுள்! இதை மட்டுமே முழுநேரத் தொழிலாக செய்து காசு பார்ப்பவர்கள் அயல்நாடுகளில் எக்கச்சக்கம்.

4. www.franchiseindia.com போன்ற இணையதளங்களுக்குப் போய் பாருங்கள். சொற்ப முதலீட் டில் பெரிய நிறுவனங்களின் பிரான்சைஸ் வாய்ப்புகள் குவிந்திருப்பதைக் காணலாம். இதில் உங்களுக்கு ஆர்வமிருக்கும் துறையில் வாய்ப்பைத் தேர்ந்தெடுத்து, நன்கு விசாரித்துத் தொழில் தொடங்கலாம்.

5. இபே (ebay) போன்ற நம்பிக்கையான வலைதளங்களில் பொருட்களை வாங்கி விற்பது ஒரு லாபகரமான வேலை. சிறிது நாள் இந்த 'இபே' செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்தபின் களத்தில் இறங்குவது நல்லது.

6. வெப் டெவலப்பர் – இப்போதைய ஹாட் வேலைகளில் ஒன்று. வீட்டில் இருந்தபடியே தனியாருக்குத் தேவையான வலைதளங்கள் உருவாக்கு வதுதான் இந்த வேலையே. இணையத்தில், இதற்கென இருக்கும் பகுதிகளில் உங்களைப் பற்றி ஒரு விளம்பரம் கொடுத்தால் வேலை தேடி வர வாய்ப்பு உண்டு.

7. 'புரூஃப் ரீடிங்', 'எடிட்டிங்' போன்ற வேலைகளைச் செய்வதற்கு இப்போது நிறைய ஆட்கள் தேவைப்படுகிறார்கள். அதிலும், வீட்டில்இருந்தபடியே செய்யத் தயாராக இருந்தால் வரவேற்பு நன்றாகவே இருக்கும். பத்திரிகை அலுவலகங்கள், பதிப்பகங்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டால்... வாய்ப்புகள் கிடைக்கும்.

8. டைப்பிங் நன்றாகத் தெரிந்தால் டேட்டா என்ட்ரி வேலை செய்யலாம். வீட்டில் இருந்தபடியே ஆவணங்களை கம்ப் யூட்டரில் டைப் செய்து ஏற்ற வேண்டும். பெரும்பாலும் அதுதான் வேலை. இந்த வேலைக்காக ஆள் கேட்டு பேப்பரில் வரும் விளம்பரங்களில் தொடர்புகொண்டு பணி தேடலாம். அதோடு, நிறுவனத்தின் நம்பகத்தன்மையை ஏற்கெனவே பணி செய்பவர்களிடம் உறுதி செய்வதும் முக்கியம்.

9. வீட்டில் நான்கு கம்ப்யூட்டர் வைக்க இடமிருந்தால் போதும்... குழந்தைகளுக்கு கம்ப் யூட்டர் பயிற்சி கொடுக்கும் தொழிலை ஆரம்பிக்கலாம். அளவான வருமானத்துக்கும், உங்களின் பொழுது போக்குக்கும் இது உத்தரவாதம்.

10. கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் தெரிந்தால்... வீட்டிலேயே ரிப்பேர் கடை ஒன்றை ஆரம்பிக்கலாம். கம்ப்யூட்டர்தான் என்றில்லை... எந்தெந்த துறையில் எல்லாம் ரிப்பேர் பார்க்கும் திறமை உங்களுக்கு உண்டோ, அதிலெல்லாம் நுழையலாம்.

வீடே தொழிற்பேட்டை!

உங்கள் வீட்டைச் சுற்றி டெய்லரிங் கடைகள், ஹேட்டல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள், பெரிய அபார்ட்மென்ட்கள் என்று இருந்தால், ஏகப்பட்ட வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

11. வீட்டுக்கு அருகில் டெய்லரிங் கடை இருந்தால், பட்டன் தைத்தல், ஹெம்மிங் செய்தல், எம்ப்ராய்டரி என்று துணைத்தொழில்களை அவர்களிடம் இருந்து கேட்டுவாங்கி செய்து கொடுக்கலாம்.

12. ஹோட்டல்கள் மிகுந்த ஏரியா என்றால்... இலை மற்றும் தண்ணீர் சப்ளை செய்வ தற்கான வாய்ப்பை கேட்டுப் பெறலாம். சில ஹோட்டல் களில் மசாலா அரைத்துத் தருவது, பாத்திரம் கழுவித் தருவது போன்ற வேலைகளையே கான்ட்ராக்ட் ஆக தருகிறார்கள். ஆர்வம் இருப்பின் ஆட்களை வைத்துக் கொண்டு அதையும் முயற்சிக்கலாம்.

13. கடை வீதியாக இருந்தால், பல கடைகளுக்கு வாசல் பெருக்கி தண்ணீர் தெளிக்க வேண்டிய வேலை இருக்கும். இதையும் கான்ட்ராக்ட் ஆக எடுத்து செய்தால்.. அதிலிருந்து ஒரு லாபத்தைப் பார்க்கலாம்.

14. வீட்டுக்குக் குறைந்த பட்சம் இரண்டு செல்போன் வைத்திருப்பார்கள். அதனால் ரீ-சார்ஜ் கூப்பன்கள் வாங்கி வைத்து வியாபாரம் செய்யலாம். மொத்தமாக நீங்கள் ரீ-சார்ஜ் கூப்பன் வாங்கும்போது சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனத்திடம் இருந்து கமிஷன் கிடைக்கும்.

15. மொத்த விலையில் பாக்கெட் பால் வாங்கி, நீங்களாகவோ அல்லது ஆள் வைத்தோ வீடு வீடாக பால் சப்ளை செய்யலாம். வீட்டில் எப்போதும் ஸ்டாக் வைத்திருந்தால் தேவைப் படுபவர்களுக்கு விற்கலாம். தயிர், மோர், தண்ணீர் கேன் மற்றும் பாக்கெட் மாவு போன்றவற்றை விற்பனை செய்தால் கூடுதல் லாபம்.வீட்டிலேயே போதுமான இடவசதி இருந்தால்... குழந்தைகளுக்குரிய புத்தகங்களை வைத்து வாடகை நூலகம் நடத்தலாம்.

16. அண்டை வீட்டுப் பெண்களின் புடவைகளை சேகரித்து, நாமே டிரைவாஷ் செய்து தரலாம். அல்லது டிரைவாஷ் கடைகள் மூலம் செய்து தந்து அதற்கான கமிஷனைப் பெற்றுக் கொள்ளலாம்.

17. அண்டை வீடுகளில் அலுவலகம் செல்பவர்களாக இருந்தால், அவர்களுடைய மின்சாரம், தொலைபேசி போன்றவற்றின் கட்டணங்களைச் செலுத்துவது, சமையல் கேஸ் புக் செய்வது போன்ற வேலைகளை செய்து கொடுத்து கமிஷன் பெறலாம்.

18. வெட்டிங் பிளானர் என்பது திருமணங்களுக்குத் தேவையான அனைத்தையும் ஏற்பாடு செய்து கொடுக்கும் பணி. திருமண அழைப்பிதழ் எங்கே அச்சடிக்கலாம் என்று தொடங்கி, என்ன மாதிரியான சாம்பார் வைப்பது என்பது வரை பிளான் பண்ணும் வேலை. திறமையான சிலர் வேலைக்கு இருந்தால் மொத்தமாக ஆர்டர் பிடித்து நல்ல லாபம் ஈட்டலாம்.

19. ஒரு வீட்டுக்கு என்னென்ன தேவைப்படும் என்பதை பட்டியலிடுங்கள். அவற்றில் சிலவற்றைச் செய்து தரும் ஏஜென்ஸி போல செயல்படலாம். உதாரணமாக, வீடுகளுக்கு அலாரம் அமைப்பது, கொசு வராமல் ஜன்னல்களில் வலை அடிப்பது இப்படி சில. இதற்கான நிறுவனங்களை இணையதளம் வழியாக கண்டறிந்து மொத்த விலையில் கொள்முதல் செய்து, பின்னர் நிறுவனங்கள், வீடுகளில் கேன்வாஸ் செய்து ஆர்டர் எடுக்கலாம்.

20. உங்கள் வீட்டில் விசாலமான ஹால் அல்லது எக்ஸ்ட்ரா ரூம் இருந்தால், கம்ப்யூட்டர் கேம் ஆரம்பிக்கலாம். அக்கம் பக்கத்து குழந்தைகளை அழைத்து விஷயத்தைச் சொன்னால்... அந்த ஏரியாவுக்கே விஷயம் ஈஸியாக பரவிவிடும். மணிக்கு இவ்வளவு ரூபாய் என கணக் கிட்டு காசு பார்க்க லாம்.

கைகொடுக்கும் இயந்திரங்கள்!

வீட்டிலேயோ அல்லது சிறிய அளவிலான கடையிலேயோ வைத்து பிசினஸ் செய்யும் வகையில் எண்ணற்ற இயந்திரங்கள் இருக்கின்றன. அவற்றில் சில கீழே அணி வகுக்கின்றன. உங்கள் வசதிக்கு ஏற்ப முடிவு செய்யலாம்.

21. மெழுகுவர்த்தி மெஷின்: 700 ரூபாயில் தொடங்கி 45 ஆயிரம் ரூபாய் வரையிலான விலைகளில் கிடைக்கிறது. சிறிய மெஷினில் ஒரு மணி நேரத்தில் 55 மெழுகுவர்த்திகள் செய்யலாம். ஏற்றுமதி செய்யும்பட்சத்தில் பெரிய மெஷின் வாங்கலாம். இதில் 500 முதல் 1,000 மெழுகுவர்த்திகள் தயாரிக்கலாம்.

22. சாக்பீஸ் மெஷின்: இதன் விலை 15 ஆயிரம் ரூபாய். நாள் ஒன்றுக்கு 10 கிலோ அளவுக்கு சாக்பீஸ் தயாரிக்கலாம்.

23. பவுச் மெஷின்: 1 ரூபாய், 2 ரூபாய் என்று விற்பனை செய்யப்படும் ஊறுகாய், வாஷிங் பவுடர், எண்ணெய் போன்ற பொருட்களை சாஷே பாக்கெட்டுகளில் அடைத்துத் தரும் மெஷின் இது. விலை ஒரு லட்சம். 24 மணி நேரமும் தொடர்ந்து இயக்கலாம்.

24. பாப் கார்ன் மெஷின்: விலை 70 ஆயிரம் ரூபாய். மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் இந்த மெஷினை வைத்து வியாபாரத்தை ஆரம்பித்தால், நல்ல வருமானத்தைப் பார்க்கலாம்.

25. பேப்பர் கப் மெஷின்: இதில் செமி ஆட்டோமேட்டிக், ஃபுல்லி ஆட்டோமேட்டிக் என இரண்டு வகை இருக்கிறது. ரூ. 5 லட்சம் முதல் 18 லட்சம் வரை விற்கப்படுகிறது (18 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கும்போது, குறிப்பிட்ட கால அளவுக்கு மூலப்பொருட்களையும் சப்ளை செய்வார்கள். ஒரு வருட வாரன்ட்டியும் உண்டு). இதில், பேப்பர் பேக் கூட தயாரிக்கலாம்.

26. ஜூட் பேக் மெஷின்: சணல் பைகள், சணல் மிதியடி போன்றவை தயாரிக்கும் மெஷின் இது. 8 ஆயிரம் ரூபாயில் தொடங்கி பல்வேறு விலைகளில் கிடைக்கிறது. 2 மெஷினை வாங்கிப் போட்டு, ஒரு மாஸ்டர், 2 வேலையாட்களை வைத்தால்.. நல்ல லாபம் கிடைக்கும்.

27. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதைக் குறைப்பது போன்றவை இப்போது அதிக முக்கியத்துவம் பெற்று வருகின்றன. சணல் பைகள், பிளாஸ்டிக் பைகளின் இடத்தைப் பிடிக்கத் தொடங்கிவிட்டன. இந்த வணிகம் வளரும் நிலையிலிருக்கும்போதே இதில் நுழைந்து பழகிக் கொண்டால்... பெரிய வருங்காலம் உண்டு (மேலும் விவரங்களுக்கு: ஷ்ஷ்ஷ்.ழீutமீ.நீஷீனீ).

பள்ளிக்கூடம் அல்லது கல்லூரிகளின் அருகில் நீங்கள் குடியிருந்தால் பல்வேறு வாய்ப்புகள் திறந்து கிடக்கின்றன...

28. கேன்டீன் ஆர்டர் எடுக்கலாம்.

29. மாணவர்களை அழைத்துச் செல்வதற்கான ஆட்டோக்கள் வாங்கி வாடகைக்கு விடலாம்.

30. பள்ளியின் அனுமதியுடன் ஸ்டேஷனரி கடை வைக்கலாம்.

31. டெய்லரிங் தெரிந்திருந்தால் பள்ளியில் மொத்தமாக ஆர்டர் எடுத்து யூனிஃபார்ம் தைத்துத் தரலாம்.

32. பள்ளிக்கு உள்ளேயோ அல்லது வெளியிலோ ஜெராக்ஸ் கடை வைக்கலாம். கம்ப்யூட்டர் இருப்பின் பிரின்ட் எடுத்து தரும் வேலையையும் செய்யலாம்.

33. புத்தகங்களை பைண்டிங் செய்து தரும் வேலை நன்றாக கைகொடுக்கும்.

34. இப்போதெல்லாம் பள்ளிகளில் கிராஃப்ட் வேலைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது, நீங்கள் ஓரளவுக்கு அதில் கில்லாடி எனில், அக்கம் பக்கமிருக்கும் பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்குக் கற்றுத் தரச்சொல்லி உங்களை மொய்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.

பயிற்சியிலேயே பணம் பார்க்கலாம்!

35. 'நேர்மறை சிந்தனை, போதுமான பேச்சுத்திறன், தமிழ் மற்றும் ஆங்கில அறிவு... இதெல்லாம் எனக்கு உண்டு!' என்பவர்களை, மனிதவளத்துறை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது. உங்கள் பேச்சைக் கேட்டு இதுவரை உங்கள் நட்பு வட்டம் மட்டுமே உத்வேகம் அடைந்திருக்கும். இனி, அதை உங்கள் தொழில் அடையாளமாக மாற்றிக் கொண்டு சுற்றுப்புறத்திலிருக்கும் பள்ளிகளை முதலில் அணுகுங்கள். கல்லூரி அளவில் பர்சனாலிட்டி டெவலப்மென்ட், கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் போன்றவற்றைப் பிரித்து மேய்வதற்கு பெரிய பெரிய புலிகள் இருக்கும்போது, பள்ளிகளில் இதற்கான முயற்சிகள் பெருமளவில் நடைபெறுவதில்லை என்பதே உங்களுக்கான வாய்ப்பு திறந்தே இருக்கிறது என்பதற்கு அடையாளம். ஆளுமை வளர்ச்சி பற்றிய டிப்ஸ், குட்டிக் குட்டி நீதிக் கதைகள் எனத் தொடங்கி சிறப்பான ஒரு பவர்பாயின்ட் பிரசன்டேஷனைத் தயார் செய்யுங்கள். நியாயமான சிறு தொகைக்கு பயிற்சி வகுப்பு எடுத்து, வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்படி செய்யுங்கள். முதல் மூன்று அல்லது நான்கு பள்ளிகள் தான், பிறகு உங்கள் டைரி எப்பவுமே ஹவுஸ்ஃபுல்தான்!

36. பெரிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் திறமையை மேம்படுத்த பல்வேறு டிரெய்னிங் புரோக்ராம்களை நடத்துகின்றன. மென்கலைகள், கம்யூனிகேஷன், ஆங்கில உச்சரிப்பு போன்றவை சில உதாரணங்கள். நல்ல தெளிவான ஆங்கிலம் இருந்தால் இத்தகைய டிரெய்னிங் நடத்தித் தரும் நிறுவனங்களில் சேர்ந்து பணியாற்றலாம். தேவைப்படும்போது மட்டும் நிறுவனங்களுக்குச் சென்று டிரெய்னிங் கொடுக்க அழைப்பார்கள். மற்ற நேரங்களில் வீட்டிலேயே இருக்கலாம்.

37. செல்லப் பிராணிகளைக் கவனிப்பது, அதற்குப் பயிற்சி கொடுப்பது... இவையெல்லாம் நகர்ப்புறங்களில் நல்ல வருவாய் தரக்கூடிய பணி. ஒரு மணி நேர பயிற்சிக்கு சராசரியாக 200 ரூபாய் கிடைக்கும். அருகிலுள்ள பெட் ஷாப் மற்றும் வெட்னரி டாக்டர்களின் தொடர்பு எல்லையில் இருப்பது இதற்கு கைகொடுக்கும்.

38. சத்தமே போடாமல் சாதித்துக் கொண்டிருக்கிறது மொழிபெயர்ப்புத் துறை, பிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பானிய மொழிகளில் பயிற்சி எடுத்துக் கொண்டால்... உள்நாட்டு மொழிபெயர்ப்பு முதல் பன்னாட்டு நிறுவன வாய்ப்புகள் வரை வாய்க்கும். சென்னையில் இருக்கும் அல்லயன்ஸ் பிரான்ஸ் (பிரஞ்சு மொழிக்கு), மேக்ஸ்முல்லர் பவன் (ஜெர்மன் மொழிக்கு) ஆகிய நிலையங்களில் இதுபற்றிய வழிகாட்டுதல் கிடைக்கும்.

ஏற்றம் தரும் ஏஜென்ஸிகள்!

39. கல்லூரி மாணவர்களுக்குத் தேவையான பாடப் புத்தகங்களை வாடகை சேவை மூலமாக அளிப்பது நல்லதொரு சுயதொழில். 'புத்தகங்களை நகலெடுப்பதைவிட, மலிவான வாடகைக்கு கிடைக்கிறதே' என்று மாணவர்களும் மொய்ப்பார்கள். இதில் ஆர்வமுடையவர்கள், எம்.வி. புக் பேங்க் போன்ற தென்னிந்திய அளவில் செயல்படும் புத்தக வங்கிகளை அணுகி, அவர்களின் ஏஜென்ஸியாக சுயதொழில் தொடங்கலாம்.

40. வீட்டில் இணையதள வசதியிருந்தால்... ரயில் மற்றும் பேருந்துக்கான டிக்கெட் முன்பதிவு செய்து தரும் ஏஜென்ஸியை ஆரம்பிக்கலாம்.

41. உங்கள் பகுதியில் சுற்றுலா முக்கியத்துவம் இருந்தால்... டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் ஏஜென்ட் ஆக மாறிவிடலாம். கையிலிருந்து முதலீடு போட்டு வாகனமெல்லாம் வாங்கித்தான் இதைத் தொடங்க வேண்டும் என்பதில்லை. சரியான நெட்வொர்க்கிங் திறன் இருக்கும்பட்சத்தில், லோக்கல் வாடகை வண்டி ஆபரேட்டர் களையே பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்களுக்கும் வேலை கிடைத்த மாதிரி ஆகிவிடும்.

42. ஹெல்த் இன்ஷுரன்ஸ் பற்றிய விழிப்பு உணர்வு போது மான அளவில் இல்லை. ஆனால், தேவை இருக்கிறது. 'எந்த ஹெல்த் இன்ஷுரன்ஸ், தானே மருத்துவமனைக்குப் பணத்தை செலுத்தும் வசதி கொண்டது' என்பது போன்ற தகவல்களையெல்லாம் கையில் வைத்துக் கொண்டு ஹெல்த் இன்ஷுரன்ஸ் ஆலோசகராகக் கலக்கலாம். இன்ஷுரன்ஸ் கம்பெனிகள் தரும் கமிஷன், உங்களுக்குக் கைகொடுக்கும்.

43. ஹெல்த் இன்ஷுரன்ஸ் ஆலோசனைகளைத் தேடி வருவோரிடம்... வாகன இன்ஷுரன்ஸ், பயண இன்ஷுரன்ஸ் என அத்தியாவசிய இன்ஷுரன்சுகளை அறிமுகப்படுத்தலாம். கூடவே... வருமான வரி திட்டமிடுதல், ஆண்டு முதலீட்டுத் திட்டங்கள் என நம் சேவை தளங்களை மேலும் விரிவுபடுத்தினால் கூடுதல் லாபம்தான்!

44. இன்ஷுரன்ஸ் ஏஜென்ட் நல்ல வருமானம் தரக்கூடியத் தொழில். தொடர்புகளும், பேச்சுத் திறமையும்தான் முதலீடு. மாதம் ஒன்றுக்கு லட்ச ரூபாய் சம்பாதிக்ககூடிய ஏஜென்ட்கள்கூட நாட்டில் உள்ளனர். ஏஜென்ட் ஆவதற்கானப் பயிற்சியை இன்ஷுரன்ஸ் நிறுவனங்களே தருகின்றன. உங்கள் ஊரிலிருக்கும் எல்.ஐ.சி. கிளையின் மேனேஜரை அணுகினால் வழிகாட்டுவார்கள்.

45. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தேவைப்படும் கேட்டரிங் சேவை, புத்தகங்கள், காபி ஷாப் உள்பட ஏ டு இசட் சேவைகள் (மின்சார பில் கட்டுதல், டெலிபோன் பில் கட்டுதல்) போன்ற ஏரியாக்களை மூன்று நான்கு பெண்கள் ஒரு குழுவாக இணைந்து செய்து தரலாம். விசிட்டிங் கார்டு தயாரித்துக் கொண்டு தேவையுள்ளவர்களை சந்தித்து வாய்ப்புக் கேட்டால்... வெற்றி நிச்சயம். அது தொடர்பான இடங்களில் சிறிது காலம் பணியாற்றி அனுபவம் பெறுவது நல்லது.

46. ஏதேனும் வாங்க வேண்டும் என சிலரும், எதையேனும் விற்கவேண்டும் என சிலரும் தினமும் அல்லாடுவார்கள். இவர்கள் இருவருக்கும் தேவை ஒரு ஏஜென்ஸி. அதை நீங்களே ஆரம்பிக்கலாம். 'நெட்வொர்க்' எவ்வளவு விரிவாக... நம்பிக்கையாக இருக்கிறது என்பதன் அடிப்படையில் பிசினஸ் களைகட்டும்.

கலையிலும் கலக்கல் வருமானம்!

47. அனிமேஷன் துறை, புயல் வேகத்தில் வளர்ந்து வருகிறது. இத்துறையில் பயிற்சி தருவதற்கு சிறியது முதல் பெரிய நிறுவனங்கள் வரை போட்டி போடுகின்றன. உள்ளுக்குள் ஊறியிருக்கும் படைப்புத் திறனை இவற்றில் மெருகேற்றிக் கொண்டால், முயற்சி திருவினையாக்கும்! அனிமேஷன் படிப்புக்கான குறுகியகால படிப்புகள் உள்ளன. விநாடி அடிப்படையில் வருமானத்தைக் கொட்டும் தொழில் இது.

48. ஸ்க்ரீன் பிரின்ட்டிங், ஃபேப்ரிக் பிரின்ட்டிங் போன்ற தொழில்கள் தொடங்க அதிகம் முதலீடு தேவையில்லை. ஒன்று அல்லது இரண்டு வார பயிற்சி போதும். ஸ்க்ரீன் பிரின்ட்டிங்கில் பொதுவாக விசிட்டிங் கார்டுகள், திருமண அழைப்பிதழ்கள் என்று பிசியாகவே இருக்க முடியும். ஃபேப்ரிக் பிரின்ட்டிங்கைப் பொறுத்தவரை பெண்களுக்கான உடைகள் விற்கும் கடைகளோடு நல்ல தொடர்பினை ஏற்படுத்திக் கொள்வது வளர்ச்சிக்கு உதவும்.

49. ஓவியம், கார்ட்டூன் போடும் கலை உங்களுக்கு வாய்த்திருக்கிறதா? பத்திரிகை அலுவலகங்கள் மற்றும் அதன் உதவி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களுடன் மின்னஞ்சல், கடிதம் வழியாகத் தொடர்பு கொண்டு வாய்ப்புக் கேட்டு முன்னேறலாம்.

50. 'கிளாஸ் பெயின்ட்டிங்' இப்போது மிகவும் பாப்புலர். நல்ல கவன சக்தி இருந்தால் போதும் கண்ணாடி பெயின்ட்டிங்கில் கலக்கலாம். இன்ட்டீரியர் டிசைனரோடு தொடர்பில் இருந்தால் வாய்ப்புகள் தேடி வரும்.

51. ஃபேஷன் ஜுவல்லரி உருவாக்குவது இப்போதைக்கு சூப்பர் பிசினஸ். வேலையில் இருக்கும் பெண்கள்கூட ஓய்வு நேரங்களில் இதில் இறங்கி காசு பார்க்கிறார்கள். இதற்கான பயிற்சி நிலையங்கள் எக்கச்சக்கமாக உள்ளன. நகரங்களில் இதற்கென தனிக் கடைகள் உள்ளன.

52. ஃபேஷன் டிசைனிங்... வீட்டில் இருந்தபடியே செய்யக் கூடிய ஒரு நல்ல வேலை. நல்ல கற்பனை வளமும், உலக ஞானமும் இருந்தால் இதில் சாதிக்கலாம். ரெடிமெடு ஆடை நிறுவனங்களில் நிறைய வாய்ப்பு உள்ளது.

53. வீட்டு ஜன்னல் களுக்கு அழகழகாக கர்ட்டன் செய்து போடுவது ஒரு நல்ல கலை. சிறப்பாக வடிவமைக்க முடிந்தால்... அது ஒரு நல்ல தொழிலாகிவிடும். கொஞ்சம் டெய்லரிங், கொஞ்சம் கலையுணர்வு இரண்டும் இருந்தால்... நிறைய சம்பாதிக்கலாம்.

54. பொம்மை செய்வது பெண்களுக்கு எளிதான ஒரு பணி. பொம்மை உருவாக்கும் கம்பெனிகளிடமிருந்து ஆர்டர் பெற்று வீட்டிலேயே பொம்மைகளைத் தயாரிக்கலாம். அக்கம் பக்கத்து கடைகளிலேயே ஆரம்பகட்ட ஆர்டகளை கணக்கிட்டு, தொழிலைத் தொடங்கலாம்.

55. ஹேண்டி கிராஃப்ட் தொழிலில் நீங்கள் வல்லவர்கள் என்றால், நீங்கள் செய்த பொருட்களோடு சென்னையில் இருக்கும் காதி கிராஃப்டை அணுகுங்கள். அங்கே மிக குறைந்த விலையில் உங்கள் பொருட்களை வைப்பதற்கு இடம் தருவார்கள். வருபவர்களின் பார்வை உங்கள் பொருளில் பட்டால் லக் உங்களுக்குதான்.

ஊட்டம் தரும் உணவு பிசினஸ்!

56. அலுவலகவாசிகளின் மிகப்பெரிய சிக்கலே வீட்டுச் சாப்பாடுதான். கேன்டீன், ஹோட்டல் என சாப்பிடும்போது பர்ஸ் காலியாவதோடு... வயிறும் பதம்பார்க்கப்படுகிறது. இவர்களை குறி வைத்து வீட்டுச் சாப்பாடு விற்பனையில் இறங்கினால்... கொடி கட்டலாம். ஒரு இடத்தில் வைத்து விற்பதானாலும் சரி, வேலையாள் மூலமாக அலுவலக வாசல்களில் விற்பதானாலும் சரி... சிறந்த வருவாய் தரக்கூடிய வேலை. வீட்டுக்கு அருகில் இருக்கும் அலுவலகங்களில் ஆர்டர் பிடிப்பதன் மூலம் பிள்ளையார் சுழி போடலாம்.

57. பிறந்த நாள் கேக் போன்றவை செய்வது சுவாரஸ்யமான வேலை. கேக் டெகரேஷன் பண்ணுவதே ஒரு கலை. அதைக் கற்றுக் கொண்டால் இதில் பிரகாசிக்கலாம். அருகிலுள்ள பேக்கரி, ஹோட்டல் போன்றவற்றை அணுகுவது பயனளிக்கும்.

58. சமையலில் நீங்கள் கில்லாடி எனில், சமையல் பள்ளி ஒன்றை ஆரம்பித்தால்... சக்கை போடு போடலாம். சமைக்கத் தெரியாத பார்ட்டிகள்தான் இப்போது அதிகம் என்பதால்... உங்கள் அக்கம் பக்கத்து வீட்டு பெண்களே குவிய ஆரம்பித்துவிடுவார்கள்! புதுமையான விஷயமாகவும் இருக்கும்.

59. வீட்டில் கொஞ்சம் இடம் இருந்தால்... மினி பேக்கரி நடத்தலாம். இனிப்பு வகைகள், முறுக்கு வகைகள் என ஆரம்பித்து... இடம், பொருள் அறிந்து செயல்பட்டால் விரிவாகவே பிசினஸை டெவலப் செய்ய முடியும்.

60. ஒரு ஜூஸ் ஷாப் ஆரம்பிக்கலாமே... முதலீடு கொஞ்சம் போதும். ஓரளவுக்கு மக்கள் நடமாட்டம் உள்ள இடமாக இருக்கவேண்டும். நாலு பேருக்கு உங்கள் கடை ஜூஸ் பிடிக்கும் வரைதான் போராட்டம். பிறகு, ஆட்கள் தேடி வருவார்கள்.

61. மாலை நேர திடீர் கடை ஆரம்பித்து சூப், பிரட் ஆம்லெட், சாண்ட்விட்ச், சாலட் தயாரித்து விற்றுப் பாருங்கள். நல்ல ஆள் நடமாட்டமுள்ள பகுதியெனில் வியாபாரம் சூடு பிடிக்கும்.

62. இயற்கை உணவுகள் பற்றி பெரிதாக பலரும் பேச ஆரம்பித்திருக்கும் நேரமிது. கேழ்வரகு கூழ், கம்பங்கஞ்சி என்று சுத்தம் சுகாதாரமாக ஒரு கடையைப் போட்டுப் பாருங்கள்.... ஈஸியாக கல்லா நிறையும்.

மார்க்கெட்டிங்குக்கு மரியாதை!

63. எந்தப் பொருளைத் தயாரிக்க விரும்பினாலும், பிள்ளையார் சுழி போடுவதற்கு முன்பாக நீங்கள் செய்ய வேண்டியது... விற்பனை வாய்ப்பு எப்படி இருக்கும் என்பதைத் தேடித் தெரிந்துகொள்வதைத்தான். அந்தப் பொருள் அந்தச் சூழலுக்குத் தேவையானதுதானா... அதை மக்கள் வாங்குவார்களா... என்பது போன்ற கேள்விகளை எழுப்பிக் கொண்டு சிறிய அளவிலான சர்வே நடத்துவது மிக முக்கியம்.

64. உங்கள் பகுதியில் எந்த பொருளுக்கு சிறப்பான மரியாதை இருக்கிறது என்பதைக் கண்டறி யுங்கள். அதுவே கூட உங்களை உயர்த்திப் பிடிக்கக் கூடிய ஒரு தொழிலாக இருக்கக்கூடும். ஆம், பிற பகுதிகளிலும் அதற்கு சந்தை வாய்ப்பு இருக்கிறதா என்று தேடி அறிந்தால்... திருநெல்வேலி அல்வாவுக்கு சென்னையில் மவுசு இருப்பது போல, நீங்கள் கையில் எடுக்கும் பொருளுக்கும் மவுசைக் கூட்ட முடியும். பாக்கெட்டை நிரப்ப முடியும்! உதாரணத்துக்கு, உங்கள் பகுதியில் பனை பொருட்கள் அல்லது சுடுமண் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்றால், உள்ளூர் சந்தையில் ஒரு விலை இருக்கும். பிற நகரங்களுக்கு வந்துவிட்டால் அவற்றின் விலை வேறு. இந்த சூட்சமம் உங்களுக்குப் புரிந்துவிட்டால் உள்ளூர் அம்பானி... நீங்கள்தான் அம்மணி.

65. மார்க்கெட்டிங் ஒரு சிறப்பான வழி. குறிப்பாக 'ஆம்வே' போன்ற நம்பத் தகுந்த மார்க்கெட்டிங் குழுவில் இணைந்து பணியாற்றலாம். பேச்சுத் திறமை மட்டும் இருந்தால் போதும். அலுவலகத்தில் இருக்க வேண்டிய தேவையில்லை. உங்கள் பொருளை மார்க்கெட்டில் விற்கப் போகிறீர்கள் என்றால், கஸ்டமரிடம் தப்பித் தவறிகூட 'என் குடும்ப கஷ்டம் இந்தத் தொழிலுக்கு வந்துட்டேன். தயவு செய்து இந்தப் பொருளை வாங்கிக் கோங்க...' என்று மட்டும் மூக்கை சிந்த ஆரம்பித்துவிடாதீர்கள். ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் நாணயத்தை பிச்சையாக விட்டெறிந்து கதவைச் சாத்திவிடுவார்கள். அதேபோல உங்களுடைய பெருமைகளை டமாரம் அடிக்கவும் செய்யாதீர்கள்

66. ஒரு தொழிலைத் திட்டமிடும் முன்பாக... எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதைக் கணக்கிடுங்கள். பிறகு, அதைப்போல இரண்டு முதல் மூன்று மடங்கு வரை பணத்தைத் தயாராக வைத்துக் கொண்டு களமிறங்குங்கள்.

67. தோல்வி குறித்த பயமின்மை, சரியான தெளிவு, போதிய பண வசதி... ஒரு தொழிலைத் தொடங்குவதற்கு இவை மூன்றும்தான் முக்கியமான முதலீடுகள்.

கதம்பம்!

68. பியூட்டி பார்லர் ஆரம்பிப்பது சிறப்பான வருமானம் தரக்கூடிய வேலை. உங்கள் வீடு மக்கள் நடமாட்டமுள்ள இடத்தில் இருந்தால்... உடனடியாக ஆரம்பிக்கலாம். இதற்கென பயிற்சிகள் தர நிறைய நிறுவனங்கள் உள்ளன.

69. 'பொக்கே' கொடுக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. மொத்த வியாபாரிகளிடம் தொடர்பு கொண்டால், தேவையான பூக்களை தினமும் வரவழைத்துத் தருவார்கள். அதை நம் கற்பனைக்குத் தக்கவாறு தயாரித்து விற்கலாம். முதலீடு இருந்தால் போட்டோ பிரின்ட்டிங், ஃபிரேமிங் போன்றவை ஆரம்பிக்கலாம். தொடர்புடைய நிறுவனங்களை அணுகி பயிற்சி பெற்றுக் கொள்ளலாம்.

70. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி செய்து ஓய்வு பெற்றவர்கள் என்றால்... வேலை வாய்ப்புக்கான வழிகாட்டுவதையே ஒரு தொழிலாகச் செய்யலாம். ரெஸ்யூம் எனப்படும் பயோடேட்டா தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு உதவிகளைச் செய்துகொடுத்து, தகுந்த சன்மானத்தைப் பெறலாம்.

71. போட்டோ ஷாப், இன்டிஸைன், போன்ற கோர்ஸ்களை பயின்றால் பத்திரிகை அலுவலகங்கள், அச்சகங்கள் போன்றவற்றில் வேலைவாய்ப்பு உண்டு. ஆர்டர் வாங்கி வீட்டில் இருந்தும் தொழில் செய்யலாம். வீடியோவில் எடிட்டிங் செய்வது போன்ற பயிற்சிகளைப் பெற்றால் ஸ்டூடியோக்களில் பணி கிடைக்கும்.

72. டி.வி.டி., சி.டி., புத்தகம் போன்றவற்றை வாடகைக்கு விடும் கடையை வீட்டிலிருந்தபடியே நடத்தலாம். மெம்பர்ஷிப் அதிகம் கிடைத்தால்... பெரிய அளவில் விரிவுபடுத்தலாம்.

விவசாயத்துலயும் விஷயமிருக்கு!

லட்சங்களையும் கோடிகளையும் முதலீடு செய்தால்தான் பிசினஸா... மிகக்குறைந்த முதலீட்டிலும் லாபம் பார்க்கலாம் என்பதற்கு விவசாயம் சார்ந்த பிசினஸ்களே சரியான உதாரணங்கள்...

73. உங்கள் பகுதியில் எந்தெந்த பருவத்தில் என்னென்ன காய்கறிகள் அதிகம் கிடைக்கிறதோ... அவற்றை வாங்கி சுத்தப்படுத்தி காயவைத்து, காய்கறி வற்றல் தயாரிக்கலாம். பாலித்தீன் பைகளில் அடைத்து அருகில் இருக்கும் மொத்த வியாபாரிகளிடம் கொடுப்பதன் மூலம் உங்களுக்கு வருமானம் வரும். கொத்தவரங்காய், கத்திரிக்காய், சுண்டக்காய், பாகற்காய், மாங்காய் போன்ற வத்தல்களுக்கு எப்போதும் மவுசு உண்டு.

74. சுயஉதவிக் குழு பெண்கள் இணைந்து கிராமத்தில் இருக்கும் புளிய மரங்களை ஏலத்துக்கு எடுக்கலாம். புளியம் பழங்களை உதிர்த்து, புளியை இடித்துப் பதப்படுத்தி பேக் செய்து மொத்த வியாபரிகளிடம் விற்கலாம்.

75. நெல்லிக்காய் அதிகம் கிடைக்கும் சீஸன் என்றால்... அதை வாங்கி சுத்தப்படுத்தி, தேனில் ஊறவைத்து, நிழலில் காயவையுங்கள். பிறகு, 50 கிராம், 100 கிராம் என பாலித்தீன் பைகளில் பேக் செய்து மூலிகைக் கடைகளிலும், டவுனிலுள்ள மளிகைக் கடைகளில் கொடுக்கலாம். தொடர்ந்து செய்யும்போது ரெகுலர் கஸ்டமர்கள் கிடைப்பார்கள்.

76. உங்கள் வீட்டு புறக்கடையில் அதிக இடமிருந்தால்... நாட்டுக்கோழி வளர்க்கலாம். உள்ளுர் சந்தையிலேயே நல்ல வரவேற்பு இருக்கும். நாட்டுக்கோழி மற்றும் அதன் முட்டைகளுக்கு எப்போதுமே கிராக்கிதான்.

77. வீட்டுக்கு அருகில் இடமிருந்தால்... நர்சரிகளில் விற்கும் செடிகளை வாங்கி வந்து விற்கலாம். அருகில் உள்ள தோட்டக்கலை மற்றும் வனத்துறையில் மிகக் குறைந்த விலைக்கு நாற்றுகள் கிடைக்கும். உங்கள் ஏரியாவில் நன்றாக வளரக்கூடிய செடிகளை விற்பதால் அதிக லாபம். செடிகளுக்கு போடக்கூடிய ஆர்கானிக் உரம், காய்கறி மற்றும் பூச்செடி விதைகள்கூட விற்கலாம். இதற்காக, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், மாநில தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்துறை போன்றவற்றை அணுகலாம்.

78. வண்ண மீன் வளர்ப்பு என்பது நகர்ப்புறங்களில் பரபரப்பான விஷயமாக இருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை கொளத்தூர் பகுதியில் வண்ண மீன் வளர்ப்புத் தொழில் பெரியளவில் நடைபெறுகிறது. இங்கு மொத்தமாக வாங்கி, சில்லறையாக விற்கலாம். தொட்டிகள் உட்பட மீன் வளர்ப்புக்குத் தேவையான பொருட்களையும் விற்கலாம்.

79. காளான் வளர்ப்பு பெரிய பிசினஸாக வளர்ந்து வருகிறது. வீட்டில் இருக்கும் சிறிய இடத்திலேயே பயிர் செய்து, அக்கம் பக்கத்து வீடுகளுக்கு ரெகுலராக சப்ளை செய்தாலே... மாதாந்திர செலவுக்கு கைகொடுக்கும்.

80. கீரையைக் கிள்ளுவதுதான் பெரிய பிரச்னையாக இருக்கிறது. அதனால், கீரையை வாங்கி சுத்தப்படுத்தி, அதைக் கிள்ளி பாக்கெட் போட்டுக் கொடுத்தால் பக்காவாக காசு பார்க்கலாம்.

பிசினஸைப் பதிவு செய்வது எப்படி?

81. பெயரில்லாத பிள்ளையை எப்படி அழைக்க முடியும்? எனவே, நீங்கள் தயாரிக்கும் பொருளுக்கு முதலில் தகுந்த பெயரை வைத்து விடுங்கள். அந்தப் பெயர் என்ன டிசைனில் வரவேண்டும் என்பதை தீர்மானித்த பிறகு, முறைப்படி பதிவு செய்யுங்கள். பதிவு செய்ய 3,500 ரூபாய் செலவாகும். விஷயம் தெரியாமல் ஏமாற்றுக்கார புரோக்கர்களிடம் சிக்கினால், குறைந்தது பத்தாயிரம் ரூபாய் காலி.

82. 'இந்தியன் கம்பெனீஸ் ஆக்ட்'படி உங்கள் கம்பெனிக்கான பின் நம்பரை வாங்க
வேண்டும். இதற்காக நீங்கள் அணுகவேண்டியது 'ரிஜிஸ்ட்ரார் ஆஃப் கம்பெனீஸ்' அலுவலகத்தைதான். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் போகிறீர்கள் என்றால், அதே அலுவலகத்தில் ஐ.இ. (இன்டர்நேஷனல் எக்ஸ்போர்ட்) கோட் நம்பர் வாங்க வேண்டும். இது இருந்தால்தான் ஏற்றுமதி செய்ய முடியும்.

83. www.ipindia.nic.in இந்த இணையதள முகவரி, உங்கள் பொருட்களுக்கான டிரேட்மார்க் பெறுவற்கான அப்ளிகேஷன் பதிவது முதல், சர்வதேச அளவில் விற்பனை செய்வதற்கான இன்டர்நேஷனல் பின்கோடு வாங்குவது வரை அத்தனை வசதிகளையும் அளிக்கிறது.

84. ஃபேஷன் ஜுவல்லரி, தங்க நகைகள், டயமண்ட், ஆர்டிஃபீஷியல் ஜுவல்லரி உற்பத்தி செய்கிறீர்கள் என்றால் இந்திய அரசின் ஜெம் அண்ட் ஜுவல்லரி எக்ஸ்போர்ட்ஸ் புரமோஷன் கவுன்சிலில் உங்கள் பொருட்களின் பெயர்களைப் பதிந்து கொள்ளுங்கள். அவர்கள் வெளியிடும் புத்தகத்தில் உங்கள் பொருட்கள் பற்றிய தகவலும் இடம்பெறும். வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் நகை வாங்க வேண்டும் என்றால், இந்தக் கவுன்சிலைத்தான் அதிகம் தொடர்பு கொள்வார்கள். அந்த நிறுவனம் உங்கள் பெயர்களை பரிந்துரைக்க நிறையவே வாய்ப்பு இருக்கிறது. இதில் பதிவு செய்வதற்கு குறிப் பிட்ட தொகையைக் கட்டணமாகச் செலுத்தவேண்டும். இணையதளம்: www.gjepc.org

உஷார்... உஷார்!

85. பக்கத்து வீட்டுக்காரர் சம்பாதிக்கிறார் என்பதற்காக அதேபோன்ற தொழிலில் நீங்களும் இறங்க வேண்டாம். உங்களுக்கு என்று ஒரு தனித்துவத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

86. உங்கள் பார்டனராக நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபர் வெறும் வாய்ச்சொல் வீரராக மட்டுமல்லாமல், பிசினஸில் முதலீடு போடுபவராகவும் இருக்கவேண்டும்.

87. சிறு தவறுகூட பெரிய நஷ்டத்தில் கொண்டு விடும். ஒரு தவறு நடந்துவிட்டால் உடனே சரி செய்ய முயற்சியுங்கள்.

88.உங்கள் பொருளுக்கு பெரிய ஆர்டர் கிடைத்திருக்கிறது என்றால், உடனடியாக சம்பந்தப்பட்ட விவரங்களை சரி பார்த்து, கணக்குப் போட்டு சூட்டோடு சூடாக களம்இறங்குங்கள். கொஞ்சம் தாமதித்தாலும் வேறொருவர் கைக்கு ஆர்டர் கைமாறிவிடவும் வாய்ப்பு உண்டு.

89. நேரடியாக சென்று பொருட்களை விற்கும் தொழிலில் இறங்குகிறீர்களா... ஜாக்கிரதை. குறிப்பாக அதிக கூட்டமற்ற இடங்கள் மற்றும் இரவு, மதியம் போன்ற நேரங்களைத் தவிர்க்க வேண்டும்.

90. 'முன்பணம் அனுப்புங்கள்' என்று வரும் விளம்பரங்களில் 100% எச்சரிக்கை தேவை. நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு பைசாவுக்கும் ஆவணங்களை உருவாக்குவது முக்கியம்.

91. பொருட்களில் கண்டிப்பாக தரம் வேண்டும். 100 பொருட்களை நன்றாக செய்து, 101-வது பொருள் தரமில்லாததாக இருந்தால் உங்களது பெயர் கெட்டுவிடும்.

92. பொருட்கள் எவ்வளவு முக்கியமோ... அதே அளவு அதனை 'பேக்' செய்து கொடுக்கும் விதமும் அவசியம். பொருட்களை அழகாக பேக் செய்து கொடுப்பதை மறந்தால் வாய்ப்புகள் மங்கிவிடும்.

93. ஏற்றுமதி தொழில் என்றால், எதிர்த்தரப்பு நம்பகமானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவது அதி முக்கியம். ஏனெனில், பல சந்தர்ப்பங்களில் பொருள் டெலிவரியான பிறகு, பணம் செட்டில் ஆகாமல் ஏமாற வாய்ப்புள்ளது.

94. நீங்கள் உற்பத்தி செய்யும் பொருளின் சந்தை வாய்ப்புகளை அவ்வப்போது கண்காணித்துக் கொண்டே இருக்கவேண்டும். கண்மூடித்தனமாக உற்பத்தி செய்துவிட்டு, கடைசியில் மார்க்கெட்டிங் இல்லாமல் திண்டாடக்கூடாது.

95. ஒரு தொழிலைப் பார்ட்னராக தொடங்கியிருந்தால்... தொழிலாளர் பொதுச் சேமநல நிதித் (பி.பி.எஃப்.) திட்டத்தில் உடனடியாக ஐக்கியமாவது முக்கியம். தொழில் முனைவோரின் நீண்டகால சேமிப்புக்கும், ஓய்வுகால வாழ்க்கைக்கும் மிகவும் அவசியமானது இந்தத் திட்டம்.

இன்முகமே லாபம் தரும்!

96. பல சந்தர்ப்பங்களில் பேச்சை விட, சிரித்த முகங்களே வெற்றியை தானே வரவழைக்கும். அதனால் எந்த சந்தர்ப்பத்தையும் ஒரு புன்னகையோடு சமாளிக்கும் பாங்கு, எளிதில் யாரோடும் பேசிப் பழகும் தன்மை... இதெல்லாம் உங்களுக்கு முக்கியம்.

97. தனியார் அலுவலகங்களில் 'பப்ளிக் ரிலேஷன் ஆபீஸர்' என்ற பணிக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. இதற்கான குறுகியகால சான்றிதழ் பயிற்சிகள், தனியார் இன்ஸ்டிடியூட்களில் உள்ளன. ஆரம்பத்தில் சிறிய நிறுவனங்களில் சேர்ந்து, படிப்படியாக மிகப்பெரிய நிறுவனங்களில்கூட வேலையில் அமரும் சாத்தியங்கள் உண்டு!

98. கவுன்சிலிங் வழங்குவது ஒரு நல்ல பணி. குறிப்பாக, அளவுக்கு அதிகமாக மன அழுத்தம் பாதிக்கும் இன்றைய வாழ்க்கைச் சூழலில் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. உளவியல் படித்த இளம் பெண்களுக்கு இது ஒரு அருமையான வேலை. மனநல மருத்துவர், தொண்டு நிறுவனத்தினர் போன்றோரின் தொடர்புகள் மற்றும் தனிப்பட்ட முறையிலும் கவுன்சிலிங் வழங்குவதற்கான வாய்ப்புகளைப் பெறலாம். ஆன்லைன் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும்கூட கவுன்சிலிங் கொடுக்க முடியும். பணத்தை வங்கியிலோ... செக் அல்லது மணியார்டர் மூலமாகவோ வாங்கிக் கொள்ளலாம்.

99. நிகழ்ச்சி மேலாண்மை (event management) இன்னுமொரு சுவாரசிய துறை. ஒரே நேரத்தில் பல வேலைகளை ஒருங்கிணைக்கும் திறன், ஒரு நிகழ்ச்சிக்குத் தேவையான அத்தனையையும் யோசித்து அவற்றைத் தயார் செய்வது போன்ற திறன்களை நம் பெண்கள் தனியே கற்க வேண்டுமா என்ன! நம் வீடுகளில் கல்யாணம், பண்டிகை என்றால் அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்பவர்களாயிற்றே நாம். நிகழ்ச்சி மேலாண்மையின் முறைமைகளை மட்டும் கொஞ்சம் பழக்கப்படுத்திக் கொண்டால் போதும், ஒவ்வொரு வேலை நாளும் திருவிழாதான்! இத்தொழிலில் ஈடுபடுவோரிடம் முதலில் உதவியாளராக சேர்ந்து பயிற்சி பெறலாம். அல்லது சின்னச் சின்ன கல்லூரி நிகழ்ச்சிகள், போட்டிகள் என பழகிக் கொண்டு, சிறிய மற்றும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களை அணுகி வாய்ப்பு தேடுங்கள்.

பயிற்சி

100. இந்திய அரசின் 'மைக்ரோ ஸ்மால் அண்ட் மீடியம் என்டர்பிரைசஸ்' டெவலப்மென்ட் நிறுவனம் (MSME Development Institute) பெண்களுக்காக இலவசமாக ஒன்றரை மாத பயிற்சியை அவ்வப்போது நடத்தும். இதில், வாஷிங் பவுடர், சோப், பினாயில் போன்ற கெமிக்கல் பொருட்கள் மற்றும் ஊறுகாய், ஜூஸ், ஜாம், மசாலாத்தூள் போன்ற உணவு சார்ந்த பொருட்களைத் தயாரிக்க பயிற்சி அளிப்பார்கள். இதைத் தொடர்ந்து சான்றிதழ் வழங்குவதோடு தொழில் தொடங்க வழிகாட்டுவார்கள். மார்க்கெட்டிங்குக்கு தனியாக பயிற்சி வகுப்புகளும் உண்டு.

விவரங்களுக்கு:

கே.வி.ராவ், உதவி இயக்குநர்,
இந்திய அரசு வளர்ச்சி நிலையம்,

 

முதலீடின்றி ஆன்லைன் பிசினஸ்



சிறிய பெட்டிக்கடை வைக்க வேண்டுமென்றால் கூட சில ஆயிரங்களை சேலெவிட வேண்டும்.ஆனால் பைசா செலவில்லாமல் உங்கள் பொருட்களை ஆன்லைன் இல் விற்கலாம்.பொருளே இல்லை என்றாலும் கூட மற்றவர்களின் பொருட்களை விற்ரு
கமிஷன் பார்க்கலாம்.

        இன்று உலகம் முழுவதும் ஆன்லைன் ஷாப்பிங் யை பிரபலப்படுத்தும் ஈபே (WWW.ebay.com) இணைய தளம் உள்பட பல ஆன்லைன் கடைகள் இதற்கு வழி வகுக்கின்றன.
பொருட்களை ஆன்லைன் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யும் இத் தளங்களில் உங்கள் பிசினஸ் கென்று அழகாக பெயர் வைத்து உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.வீட்டில் பயன்படுத்ததா கணினி கேம்ஸ் ,எலெக்ட்ரானிக் பொருட்கள்,உடுத்ததா புதிய துணிகள்,செடிகள்,நாய்க் குட்டிகள் என எதை வேண்டுமானாலும் உங்கலௌக்கென்று கொடுக்கப்படும் ஆன்லைன் இடத்தில் பட்டியிடலாம்.நீங்கள் சொன்ன விலையின் அடிப்படையில் ஏலம் விடப்படும்.


     இணைய தளத்துக்கு கமிஷன் போக மீத பணம் உங்கள் கைகளுக்கு கிடைக்கும்.பொருளே இல்லை என்றாலும் ஆன்லைன் இல் பொருட்களை விற்றுத் தரும் கமிஷன் ஏஜெண்டு கவும் செயல்படலாம்.

     இதற்கு கொஞ்சம் அதிகமாகவே நேரம் செலவிட வேண்டியிருக்கும்.ஆனால் வருமானத்தில் பின்னி எடுக்கலாம்.

கலைவண்ணம்.. கலக்கல் வருமானம் !


ஓவியம், சிற்பம் ஆகியவற்றை பரிசுப்பொருட்களாக வழங்குகிறோம். இவற்றை இணைத்து புதுவிதமாக, கலைநயத்துடன் கூடிய பரிசுப்பொருளாக வழங்கினால் அனைவரையும் ஈர்க்கும். இதையே தொழிலாக மேற்கொண்டால், வீட்டில் இருந்தபடியே வருவாய் பார்க்கலாம்
என்று கூறுகிறார் கோவை பாப்பநாயக்கன்புதூரை சேர்ந்த உமாதேவி. அவர் கூறியதாவது:  கல்லூரி படிப்பை முடித்தது முதலே சொந்தமாக தொழில் துவங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. திருமணத்துக்கு பிறகு கோவை அவிநாசிலிங்கம் பல்கலைக்கழக தொழிற்பயிற்சி மையத்தில் சேர்ந்து தையல், ஓவியம், பரிசு பொருட்கள், மசாலா பொடி தயாரிப்பு பயிற்சி பெற்றேன். பரிசுப்பொருள் தயாரிப்பை ஒரு வாரத்தில் கற்றேன். ஓவியத்தில் ஆர்வம் இருந்ததால், ஓவியம், சிற்பத்திறமையை இணைத்து பரிசு பொருட் களை செய்து பார்த்தேன்.

அதை உறவினர், நண்பர்களின் குடும்ப விழா, பிறந்த நாள் விழாவின்போது அளித்தேன். அது அவர்களை கவர்ந்தது. அவர்கள் தங்களுக்கு தேவையான பரிசுப்பொருட்களை தயாரித்து தருமாறு கூறினார்கள். நாளடைவில் இதற்கு உள்ள வரவேற்பை பார்த்து, இதையே தொழிலாக செய்யலாம் என்று கணவர் யோசனை கூறினார். அதன்படி பல்வேறு பரிசு பொருட்களை தயாரித்து எனது பகுதியில் உள்ள பரிசு பொருட்கள் விற்கும் கடை களில் காட்சிக்கு வைத்தேன். அது விற்பனையானது. கடைக்காரர்கள் தொடர்ந்து பல்வேறு பரிசு பொருட் களை செய்து தருமாறு ஆர்டர் கொடுத்தனர். வீட்டு வேலை போக மீதமுள்ள நேரங்களில் தொடர்ந்து தயாரித்து கடைகளுக்கு சப்ளை செய்து வருகிறேன். பயிற்சி மையங்களில் மற்றவர்களுக்கு கட்டண முறையில் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறேன். இத்தொழிலை துவங்க முதலீடு பெரிய அளவில் தேவை இல்லை. பெண்கள் வீட்டில் இருந்தபடியே ஓய்வு நேரத்தில் தயாரிக்கலாம். புதுப்புது வடிவத்திற்கேற்ப விற்பனை அதிகரிக்கும்.


முதலீடு: முதல்கட்ட உற்பத்திக்கு குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம், அதிகபட்சம் ரூ.10 ஆயிரம் இருந்தால் போதும். உற்பத்தி செலவு: தினசரி 3 மணி நேரத்தில் ஒரு போர்டு வீதம் மாதம் 30 போர்டுகள் தயாரிக்கலாம். இதற்கு தேவையான போர்டு விலை ரூ.1,200, வெள்ளை களிமண் (எம்.சீல்) ரூ.720, பேர்ல் மற்றும் பேப்ரிக் கலர் பெயின்ட் பாக்ஸ் ரூ2,500, எனாமல் கலர் ரூ.300, சாக் பவுடர் ரூ.1,225, இதர செலவுகள் ரூ.300 என மொத்தம் ரூ.6,245 செலவாகும். உற்பத்தி செலவு கலை வடிவத்திற்கு ஏற்ப மாறும். பெயின்ட், சாக் பவுடர் ஆகியவை ஓரளவு மீதமாகும் வாய்ப்புள்ளது.

வருவாய்: சிற்ப ஓவிய போர்டு ஒவ்வொன்றையும் குறைந்தபட்சம் ரூ.300க்கு விற்கலாம். இதன் மூலம் மாத வருவாய் ரூ.9,000. செலவு போக மாதம் ரூ.3 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். இது தினசரி 3 மணி நேரத்திற்கு கிடைக்கும் உழைப்பு கூலியாக, மாத வருவாயாக எடுத்து கொள்ளலாம். கூடுதல் நேரம் ஒதுக்கி தினசரி மேலும் 2 போர்டுகள் செய்தால், மாத லாபம் ரூ.9,000 முதல் ரூ.10,000 வரை கிடைக்கும். மேலும் படைப்பின் அழகு, வசீகரத்திற்கு ஏற்ப ரூ.3 ஆயிரம் வரை கூட விலை நிர்ணயித்து விற்கலாம். லாபம் பல மடங்கு கிடைக்கும்.

சந்தைவாய்ப்பு: பரிசு பொருட்களுக்கு எப்போதும் விற்பனை வாய்ப்புகள் அதிகம். பிறந்த நாள், திருமணநாள், குடும்ப நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து விழாக்களுக்கும் ஏற்றவாறு பல்வேறு பரிசு பொருட்கள் விற்பனை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. ஓவிய சிற்ப பரிசு பொருட்களின் புதுவித வடிவமைப்புகள் அதிக அளவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும்.
 தீபாவளி, புத்தாண்டு, கிறிஸ்துமஸ், பொங்கல் உள்ளிட்ட விழா காலங்களில் விற்பனை அதிகம் இருக்கும். கைவினை திறனுள்ள ஆட்களை நியமித்து பரிசுப் பொருட்களை அதிகளவில் தயாரித்தால் முக்கிய நகரங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பலாம். பயிற்சிக்கு: மாவட்ட தலைநகரங்களில் தொழிற்பயிற்சி நிலையங்கள், பல்கலைக்கழகங்கள், மகளிர் குழு அமைப்புகள் பரிசு பொருட்களுக்கான பயிற்சியை வழங்குகிறது. தனிப்பட்ட முறையிலும் சிலர் பயிற்சி அளிக்கிறார்கள். ஓவியம், கலை உணர்வு இருந்தால் 2 வாரத்தில் கற்றுக்கொள்ளலாம்.

தயாரிப்பது எப்படி?

கார்டுபோர்டை ஏ4 சைஸ் அல்லது தேவையான அளவுகளில் வெட்டிக் கொள்ள வேண்டும். பசையை தடவி சாக் பவுடரை தூவி நிரப்ப வேண்டும். சற்று காய்ந்ததும், அதில் வெள்ளை களிமண்ணை தேவையான உருவங்களில் வடிவமைத்து ஒட்ட வைக்க வேண்டும். அது கடவுள், பூக்கள், கார்ட்டூன் என எந்த உருவமாகவும் இருக்கலாம்.  அவற்றை மீண்டும் நன்றாக காயவைத்த பின்பு, போர்டு மற்றும் உருவத்தின் மீது எனாமல், பேர்ல், பேப்ரிக் ஆகிய பெயின்ட் வகைகளில் ஒன்றை பிரஷ் மூலம் வண்ணம் பூச வேண்டும். எந்தெந்த இடங்களில் எந்த வண்ணம் பூச வேண்டும் என்பது முக்கியம். சில இடங்களில் குறிப்பிட்ட நிறங்களை தான் பயன்படுத்த வேண்டும். வண்ணம் பூசிய பின்னர் மீண்டும் சில நிமிடங்கள் காயவைத்து, அதன் மீது வார்னிஷ் அடித்து 2 மணி நேரம் காய வைத்தால் கார்டுபோர்டு சிற்ப ஓவியம் தயாராகிவிடும்.  கார்டு போர்டில் உருவத்தை நாமே உருவாக்குவதற்கு பதில் ரெடிமேடு உருவங்களையும் பொருத்தி, புதிய வடிவத்தை உருவாக்கலாம். சில போர்டுகளுக்கு பார்டர் தேவைப்படும். அதற்கேற்றாற்போல் சாக்பவுடர், பசை, வெள்ளை களிமண் (எம்.சீல்) கொண்டே பார்டர் உருவாக்கலாம்.

போர்டுக்கு பதிலாக ஜார்களிலும் இதே பாணியில் ஓவிய சிற்பம் உருவாக்கலாம்.  கட்டமைப்பு: வீட்டில் நாம் பயன்படுத்தும் அறையே போதுமானது. தரையிலோ, டேபிள் சேர் மீது அமர்ந்தோ தயாரிக்கலாம். தயாரித்த பொருட்களை இருப்பு வைக்க வீட்டின் ஷெல்ப் அல்லது பெட்டி போதும். தேவையான பொருட்கள்: கார்டுபோர்டு, சாக் பவுடர், வெள்ளை களிமண்(எம் சீல்), எனாமல் பெயின்ட், பல வகை பிரஷ்கள், பசை, வார்னிஷ் மற்றும் பல்வேறு வண்ணங்களில் பேர்ல் மற்றும் பேப்ரிக் பெயின்ட். கிடைக்கும் இடங்கள்: டிராயிங் ஸ்டேஷனரி கடைகள் அனைத்திலும் கிடைக்கும்.

வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு (பெண்களுக்கு மட்டும்)


இன்றைய பரபரப்பான வேகமான உலகில் எவ்வளவு வருமானம் வந்ததாலும் பற்றாக்குறையாகவே  பலருக்கும் உள்ளது. ஆகவே ஏதேனும் கூடுதல் வருமானம் தேடி பலரும் அலைவதுண்டு. வழி தெரியாமல் விழிப்பதுண்டு. இதோ உங்களுக்காகவே ஓர் அரிய வாய்ப்பு.
 தகுதி: டிகிரி, டிப்ளமா, BE / B. Tech, MBA, MCA மற்றும் இன்டர்நெட்டில் இ-மெயில் அனுப்ப தெரிந்திருத்தல் அவசியம். MBA (HR) - முன்னுரிமை வழங்கப்படும். 
நன்கு ஆங்கிலம் படிக்கத் தெரிந்திருத்தல்  அவசியம். ஓரளவு பொது அறிவும் இருக்க வேண்டும்

தேவை: ஒரு கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் இணைப்பு 256 KPBS இருந்தால் கூட போதுமானது.

 இ - மெயில் - க்கான மெசேஜ் கொடுத்துவிடுவார்கள். ஒரு இ - மெயில் மெசேஜ் மற்றும் ஒரு SMS - க்கு ரூபாய் 2 கொடுக்கிறார்கள். இது இந்தியாவில் உள்ளவர்களுக்கு பெண்களுக்கு மட்டும் பொருத்தமானது.
 பணத்தை ஆன்லைன் மூலமாக உங்கள் வங்கி கணகிட்கு அனுப்புவார்கள். அல்லது டிடி / செக் / மணியார்டர் வசதியும் உண்டு. ஆனால் அதற்கான கட்டணம் உங்களை சார்ந்தது. மாதம் ஒரு முறை உங்கள் பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

தேர்ந்தெடுக்கும் திட்டங்களைப்ப் பொறுத்து / உங்கள் வேலை திறனைப் பொறுத்து  உங்கள் வருமானம் அமையும். குறைந்த பட்ச பயிட்சித்தொகை தொகை ஒரு முறை மட்டும்   பெறுவார்கள்.  தேர்ந்தெடுக்கும் திட்டங்களைப்ப் பொறுத்து இந்த தொகை மாறுபடுகிறது. 
மேலும் இது பற்றிய விபரங்களுக்கு இந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டோ அல்லது இவர்களின் வெப்சைட் மூலமாகவோ அறிந்து கொண்டு உடனே உங்கள் வருமானத்தை பெருக்குங்கள். 
மீண்டும் சொல்லுகிறோம் இது மிகவும் எளிய வேலை மட்டுமே. உங்கள் வாய்ப்பை தவற விட வேண்டாம். குறைந்த பட்ச ஆட்களை மட்டுமே பணியமர்த்துகிறார்கள். ஆகவே உடனே தொடர்பு கொண்டு விடுங்கள். உங்கள் வருமானம் நூறு சதவீதம் நிச்சயம். 
விண்ணப்பிக்க: தங்களின்  Bio Data மற்றும் photo - வுடன் E - Mail மூலம் விண்ணப்பிக்கவும் 
தொலைபேசி: 0-7305847197
வெப்சைட்டிற்கு செல்ல: www.onlinedataproject.blogspot.in

தொழில் பற்றிய போதிய அறிவு --- திட்டமிடல் (Planning)

திட்டமிடல்(PLANNING):                                                                                                              

பொதுவாக தொழில் முனைவோருக்கான திட்டமிடல் என்பது ஒரு தொழிலை தொடங்குவது குறித்தான தெளிவான அனுகுமுறையை குறிக்கிறது. அதாவது,


* என்ன தொழில் செய்யப்போகிறோம்.
* எப்படியான வழிமுறைகளை கையாளப் போகிறோம்.
* சூழ்நிலைக் காராணிகள் மற்றும் தேவையான மூலப்பொருள்களை எவ்வாறு பெறுவது.
* பொருளுக்கான சந்தையின் நிலை.
* மூலதனத்திற்கான வழிமுறைகள் பற்றிய அனுகுமுறை.
* வேலையாட்களின் ஒத்துழைப்பினை பெறுதல்.
* நிதிநிலையை சரியாக பராமரித்தல் மற்றும் பெறுக்குவதற்கான புதிய சிந்தணைகளை புகுத்தும் முறை போன்ற சில வறையறைகளை தெளிவாக புரிந்துகொண்டு செயலாற்றினால் போதும். திட்டமிடலில் வல்லுனர் ஆகிவிடலாம்.

* என்ன தொழில் செய்யப்போகிறோம்.
அனுபவம் என்பது நம்மால் மட்டுமல்ல பிறறிடம் இருந்தும் கற்றுக்கொள்ள முடியும். எனவே நாம் என்ன தொழில் செய்யப் போகிறோம் என்பதை திட்டமிடும் முன்பு அந்த தொழில் பற்றிய அறிவுடைய சிலரின் ஆலோசனைகளை கேட்டு தெரிந்து கொள்வது மிகவும் பயனை அளிக்கும். ஏற்கனவே செய்யப்போகும் தொழிலுக்கு உண்டான அனுவத்தை பெற்றிருப்போமாயின் அதில் புதிதாக மாற்றம் செய்யும் திறமையை வளர்த்துக்கொள்வது இன்றைய போட்டி யுகத்தில் வேரூன்ற உதவி செய்யும்.
நாம் செய்யும் தொழில் எத்தகையது..? அதற்கான போதிய தகுதிகள் நம்மிடம் இருக்கிறதா..? அல்லது அதை வளர்த்திக்கொள்ளும் வாய்ப்பு எந்த அளவில் இருக்கிறது...? என்பது போன்ற காரணிகளை தெளிவாக ஆலோசனை செய்யுங்கள். ஏனெனில் தொடங்கிய பின்பு அதற்குன்டான அனுபவத்தை நாம் பெறுவதற்குள் ஏறக்குறைய வாடிக்கையாளௌகளின் நன்மதிப்பை நாம் சில நேரங்களில் இழந்திற கூடும் அபாயம் இருக்கிறது.

எனக்கு தெரிந்த பணக்கார நண்பன் ஒருவன் புதிதாக தொழில் தொடங்க எண்ணி அனுபவம் + அறிவு இதனை பற்றி சிந்திக்காமல் ஒரு கம்ப்யூட்டர் சென்டரை தொடங்கி நடத்தினான். அவன் ஆர்ட்ஸ் குரூப் படித்தவன் என்பதால் கம்ப்யூட்டர் பற்றிய போதிய அறிவு பெற்றிருக்கவில்லை. இருந்தாலும் ஆட்களை வேலைக்கு வைத்து நடத்தி விடலாம் என்ற நினைப்பின் காரணமாகவே அவன் அதை தொடங்கினான். சில வாரங்கள் மட்டுமே அவனால் செய்யமுடிந்தது, இப்போது திரும்ப அவன் தனது தந்தையுடன் கம்பெனியினை கவனித்தி வருகிறான். காரணம் வாடிக்கையாளர்களின் தேவை என்ன என்பதை முழுமையாக அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. வேலைக்கு இருக்கும் ஆட்கள் சம்பளத்தை பொருத்தே நடந்துகொள்வார்கள். அவர்களிடம் எத்தகைய வேலையினை பெறுவது என்பதில் நாம் தானே தீர்மானிக்க வேண்டும்..?

வீட்டிலேயே செய்யலாம் பிசினஸ்!


தகிக்கும் வெயிலிலிருந்து தப்பிக்க குளிர்பான கடைகளில் குவிகிறது கூட்டம். மக்களின் இந்தத் தேவையையே தனது பிசினஸூக்கான அஸ்திவாரமாக்கி ஜெயித்தவர்தான் சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்த சௌமியா.
கிட்டத்தட்ட சென்னை முழுக்க பல கடைகளுக்கும் சப்ளை
ஆகின்றன, இவர் கைகளால் தயாராகும் பிரிசர்வேட்டிவ் ஜூஸ் வகைகள்!

”குடும்பம், குழந்தைகள்னு இயல்பா நகர்ந்துட்டு இருந்துச்சு வாழ்க்கை. குழந்தைங்க கொஞ்சம் வளர்ந்த பிறகுதான் எனக்குள்ள பிசினஸ் ஆசை முளை விட்டுச்சு. அந்த ஆசைக்கு நான் காலேஜ் படிச்சப்ப கத்துக்கிட்ட இந்தத் தொழில் ‘ஜூஸ்’ ஊத்த, ஒரு நல்ல தொடக்கம் கிடைச்சுது. நம்ம சென்னையில வருஷத்துக்கு முக்கால்வாசி நாள் வெயில்தானே.. அதான், அந்த கதிரவன் கடாட்சத்துல மூணு வருஷமா நல்லபடியா போய்க்கிட்டிருக்கு என்னோட ஜூஸ் பிசினஸ்” என்றவரிடம், திராட்சைப் பழ ஜூஸ் செய்யும் விதத்தை விசாரித்தோம்..

தேவையான பொருட்கள்: திராட்சைப் பழம் – அரை கிலோ, சர்க்கரை – ஒரு கிலோ, சிட்ரிக் ஆசிட் – ஒரு டீஸ்பூன், டோனோவின் எஸன்ஸ் – ஒரு டீஸ்பூன், சோடியம் பென்ஸோயேட் – அரை டீஸ்பூன்.
இவற்றையெல்லாம் எடுத்து வைத்து, விளக்கத்தை சொல்லியபடி, மடமடவென ஜூஸை செய்யத் துவங்கினார்..

”அரை கிலோ திராட்சைப்பழத்தை உதிர்த்து, கழுவிக்கணும். அதை கரண்டியால ஓரளவுக்கு மசிச்சுட்டு, அடுப்புல வச்சு பத்து நிமிஷம் சூடாக்கணும். அடுப்புலருந்து இறக்கி, ஆறுனதும் அதுலயிருந்து சாறு எடுத்துக்கணும்.

சாறு எப்படி எடுக்குறதுனு பார்க்கலாம்.. ஆறின பழத்தை மிக்ஸியில நல்லா அடிச்சுக்கணும். இதை கொஞ்சம் பெரிய துளை இருக்குற வடிகட்டியில வடிகட்டணும். அப்போதான், வெறும் சாறு மட்டும் இறங்காம, கொஞ்சம் சதையும் கலந்து அடர்த்தியா இறங்கும். ஜூஸ் பார்க்குறதுக்கு ஃப்ரெஷ் ஜூஸ் மாதிரி தெரியணும் இல்லையா? அதுக்குத்தான் இந்த ஏற்பாடு!” என்றவர், ஜூஸர் இருப்பவர்கள் அதைப் பயன்படுத்தினால், ஜூஸ் இன்னும் நன்றாக வரும் என்றொரு டிப்ஸூம் கொடுத்தபடியே தொடர்ந்தார்..

”ஜூஸ் மேக்கர்ல, மேற்புறம் பிளேடும் அடிப்புறம் வடிகட்டியும் இருக்–கும். சாறு இறங்க கீழ ஒரு பாத்திரத்தை வச்சு, அது மேல ஜூஸரை வச்சு, பழங்களைப் போடணும். மேலே உள்ள கைப்பிடியை சுத்திட்டே வந்தா, கீழ இருக்கற பாத்திரத்தில ஜூஸ் சேரும்.

அடுத்ததா அரை லிட்டர் தண்ணியை கொதிக்க வெச்சுக்கணும். அதுல ஒரு கிலோ சர்க்கரையை கொட்டி, ஒரு டீஸ்பூன் சிட்ரிக் ஆசிட்-ஐ சேர்க்கணும். சர்க்கரை கரைஞ்சு நல்லா கொதிச்சதுமே, அதை இறக்கிடணும். இந்த சர்க்கரை கரைசலை நல்லா ஆறவிட்டு, அதுல வடிகட்டி வச்சிருக்குற பழச்சாறை சேர்க்கணும்.

இப்போ, இதுல டோனோவின் எஸன்ஸ் ஒரு டீஸ்பூனும், பிரிசர்வேட்டிவ்வான சோடியம் பென்ஸோயேட் அரை டீஸ்பூனும் கலக்கணும். இதை ஒரு சுத்தமான பாட்டில்ல ஊத்திடணும். அவ்வளவுதான். ஜூஸ் ரெடி!” என்றவர், இந்த ஜூஸை பயன்படுத்தும் விதத்தையும் விளக்கினார்..

”பிரிசர்வேட்டிவ் போட்டிருக்கறதால, அது ஜூஸோட செட் ஆக ரெண்டு நாள் ஆகும். அதுக்கு அப்புறமாத்தான் எடுத்து பயன்படுத்தணும். இந்த ஜூஸ் ஒரு வருஷம் வரை அப்படியே இருக்கும். ஃப்ரிட்ஜ்ல வெச்சா ஒன்றரை வருஷம் வரை இருக்கும். ஒரு பங்கு ஜூஸூக்கு மூணு பங்கு தண்ணி கலந்து குடிக்கலாம்.

இந்த முறையில அரை லிட்டர் ஜூஸ் செய்ய அதிகபட்சமே 25 ரூபாய்தான் செலவாகும். அதை குறைந்தபட்சம் 50 ரூபாய்க்கு விக்கலாம்.. டபுள் மடங்கு லாபம் கேரன்ட்டி!” என்றவர் இன்னும் சில டிப்ஸ்களை கொடுத்தார்..

”வாங்குறது, விக்கிறது இந்த ரெண்டுலயும் கவனமா இருந்தா இன்னும் அதிக லாபம் பார்க்கலாம். அதாவது எந்த பழங்கள் எந்த சீஸன்ல விலை கம்மியா கிடைக்கும்னு பார்த்து வாங்கி ஜூஸ் செஞ்சு வைக்கணும். இதுல செலவு 60%-க்கும் மேலயே மிச்சமாகும். அந்த சீஸன் போனதுக்கு அப்புறமா அதை விக்கணும். இதுல சூப்பர் லாபம் கிடைக்கும். மே, ஜூன் மாசங்கள்ல மாம்பழ ஜூஸையும், ஜூன், ஜூலையில எலுமிச்சை ஜூஸை-யும், செப்டம்பர்ல சாத்துக்குடி, ஆப்பிள், திராட்சை ஜூஸ்-களையும் செய்யலாம்..” என்றவர், மார்க்கெட்டிங் விவரங்களையும் தந்தார்..

”தெரிஞ்ச வீடுகள்ல தொடங்கி, ஜூஸ் கடைகள், பலசரக்கு கடைகள்னு எல்லா இடத்துலயும் கொடுக்கலாம். சேல்ஸ் கேர்ள்ஸ் சிலரைப் பிடிச்சு, அவுங்ககிட்ட கொடுத்துவிடலாம். அப்பறம் என்ன.. அமர்க்கள பிக் அப் தான்!” – ஸ்வீட்டாக முடித்தார் சௌமியா.

சம்மர் சீஸனுக்கு ஏற்ற மாம்பழ ஜூஸ் செய்ய..

தேவையான பொருட்கள்:
மாம்பழம் – ஒரு கிலோ. சர்க்கரை 1.6 கிலோ, சிட்ரிக் ஆசிட் 2 டீஸ்பூன், பொட்டாஸியம் மெட்டாபைசல்ஃபேட் 1 டீஸ்பூன்
செய்முறை: மாம்பழங்களை கழுவி, தோல் சீவி, கொட்டை நீக்கி மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும்.

ஒன்றரை லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் சர்க்கரையை சேர்த்து, ஒரு டீஸ்பூன் சிட்ரிக் ஆசிட் ஐ சேர்க்கவும்.

சர்க்கரை கரைந்து நன்கு கொதித்தவுடன், இறக்கி ஆற வைத்து பின் மிக்ஸியில் அடித்து வைத்துள்ள மாம்பழத்தை கலக்கவும்.

பின் கொட்டாஸியம் மெட்டாபைசல்ஃபேட், மாம்பழ ஜூஸ் சேர்த்து கலந்து இரண்டு நாள் கழித்து பயன்படுத்தவும். ஒரு பங்குக்கு மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து பருகலாம்.

இன்னும் விபரங்களுக்கு இதோ இருக்கே சௌமியாவோட தொடர்பு எண்.. 9840609790.

சுயதொழில் எப்படி தொடங்குவது?


தொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என்று யோசனை செய்து அதன் பின்ப பணத்தினைத் தேடுவதில்லை பலர். தேவைகள் ஏற்படும் போது  தொழில்
ஆரம்பித்தால் வெற்றி பெறலாம். அந்தத்தேவைக்கேற்ப தொழில் கண்டுபிடிப்பு பற்றி சிறிய உண்மை சம்பவத்தினைச் சொல்லி உங்களுக்கு விளக்கலாம் என ஆசைப்படுகிறேன். சென்னையில் சிறந்த பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படிக்கும் விஷ்னு என்ற சிறுவன்  விடுமுறைக்கு தன் பாட்டி ஊரான காரைக்குடிக்குச் சென்றான். ஆனால் எந்த விடுமுறையினை இனினையாகக் கழிக்கலாமென்று வந்தானோ அந்த குதுகூலம் காரைக்குடி வந்ததும் மறைந்தது. ஏன்? அங்கு சென்னையிலில்லாத அடிக்கடி மின் வெட்டு இருந்தது. அங்குள்ள அனைவரும் அவதிப்படுவதினை அறிந்தான். உடனே அவன் வாலாதிருக்கவில்லை. தான் தங்கியிருந்த அறைக்கு சுய கண்டுபிடிப்பில் மின் உற்பத்தி செய்து மின் விளக்கும் விசிறியும் ஓடும்படி செய்தான். எப்படி? தன் பாட்டி வீட்டிலிருந்த பசுமாட்டிலிருந்து 2கிராம் சாணத்தினை எடுத்து 2 மில்லி தண்ணீர் ஊற்றி கலக்கி அதில் 5செ.மீட்டர் நீளம் 4செ.மீட்டர் அகலம் உள்ள எலக்ட்ரிக் வயரை விட்டு ஒரு லைட் எரியும் அளவிற்கு மின் உற்பத்தி செய்தான். அதற்கான செலவு வெறும் ரூபாய் 125 தான். பின்பு கலவையினைக் கூட்டி மின் விசிறி ஓடச் செய்தான். அவனுடைய கண்டு பிடிப்பிற்காக ‘ஐ. ஸ்வீப’; என்ற எரிசக்தி, பொறியியல் ஒலிம்பிக்கில் அவன் அமெரிக்கா டெக்ஸாசில் நடந்த பொருட்காட்சியில் கவுரவிக்கப்பட்டான். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்று இதிலிருந்து விளங்குகிறதா?
      மேற்கூறிய உண்மைச் சம்பவத்தினை நான் உங்களுக்குச் சொல்லக் காரணம் நமதூர்களிலும் மின்வெட்டு இருக்கத்தான் செய்கிறது. அதற்காக அரசினையும் அதன் அதிகாரிகளையும் சாடிக்கொண்டு வாழா வெட்டியாக உட்கார்ந்து விசிறியால் அல்லது காலண்டர் அட்டையால் வீசிக்கொண்டு இருப்போம். ஆனால் அந்தச் சிறுவன் அந்தத் தேவைக்கு என்ன வழி என்று ஒரு மாற்று சக்தியினைக் கண்டுபிடித்துள்ளான். அவன் கண்டு பிடிப்பு இரண்டு கோடி மாடுகள் உள்ள இந்தியாவில் வருங்காலத்தில் மின் உற்பத்தி மாற்றுத்தொழில் ஏற்படுத்துவதிற்கும் வழியாகுமல்லவா? ஆகவே நமது சிறிய சேமிப்பினை வைத்து தேவையறிந்து தொழில் செய்ய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதனை பயன்படுத்த நாம் தவறக்கூடாது. மத்திய அரசும் மாநில அரசும் போட்டிப்போட்டுக்கொண்டு தொழில் முனைவோருக்கு மானியம் வழங்குகிறது.

மானியம் வழங்கப்படும் தொழில்கள்:

மின் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தி
தோல் சம்பந்தமான பொருட்கள் தயாரிப்பு
வுhகன உதிரிப்பாகங்கள் தயாரிப்பு
மருந்துப் பொருட்கள் உற்பத்தி
சூரியசக்தி உபகரணங்கள் உற்பத்தி
ஏற்றுமதி ஆபரணங்கள்
மாசுகட்டுப்பாடு உபகரணங்கள்
விளையாட்டுப் பொருட்கள்
சிக்கன கட்டுமானப் பொருட்கள்
ஆயத்த ஆடைகள் தயாரிப்பு போன்றவைகள்

அரசு வழங்கும் சலுகைகள்:

15 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது.
36 மாதங்களுக்கு 20 சதவீதம் குறைந்த மின் அழுத்த மின்சாரம் வழங்கப்படுகிறது.

சிறிய தொழில்களுக்கு உற்பத்தித் தொடங்கி முதல் ஆறு ஆண்டுகளில் தெலுத்தப்படும் மதிப்புக்கூட்டு வரிக்கு((வாட்) ஈடான தொகை மானியமாக மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படுகிறது.

உற்பத்தித் தொடங்கிய மூன்று ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை குறைந்த பட்ச 25 வேலையாட்களை பணியில் ஈடுபடுத்தவும் நிறுவனங்களுக்கு கூடுதலாக ஐந்து சதவீதம் அதிகபட்சமாக ரூபாய் ஐந்து லட்சம் வரை வேலை வாய்ப்பினைப் பெருக்க மானியம் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் தொடங்கி சலுகைகள் பெற பின்தங்கிய வட்டங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன. 1971 ஆம் ஆண்டு சிப்காட் என்ற சிறு தொழில் மையம் அரம்பிக்கப்பட்டு இதுவரை 12 மாவட்டங்களில் 19 தொழில் மையங்கள் நிறுவப்பட்டு 1803 தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவைகள் எவை        என மாவட்ட தொழில் மையங்கள் மூலம் அறிந்து தொழில் தொடங்கலாம்.

      தொழில் தொடங்க அரசு வங்கிகள் தாராளமாக கடனுதவி செய்கின்றன. அதனைப் பொறுவது எப்படி? வெறும் கையினை வைத்து முழம் போட முடியுமா என சிலர் கேட்பதுண்டு.

தொழில் தொடங்கி கோடீஸ்வரர்களான சென்னையிலிருக்கும் வி.ஜி.பி, எம்.ஜி.எம், சரவண பவன் உரினையாளர்கள் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து வெறுங்கையுடன் வந்து ஹோட்டலில் வேலை பார்த்து இன்று பெரிய பணக்காரர்கள் ஆகியிருக்கிறார்கள் என்றால் ஆச்சரியமாகவில்லையா? ஏன் அவர்களைப் போல உங்களால் வெறும் கையினை வைத்துக் கர்ணம் போட்டு சாதிக்க முடியாதா? முடியும். உங்கள் கையில் உள்ள சேமிப்பினை வைத்து தொழில் தொடங்க வங்கிகளின் மானேஜரை அனுகி உங்கள் தொழில் தொடங்கும் திட்டம் பற்றி எடுத்துச் சொல்லுங்கள். உங்கள் மனுவில் நீங்கள் செய்யப்போகம் தொழில், மொத்த முதலீடு எவ்வளவு, யார்-யார் பங்குதாரர், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முதலீடு, செய்யப்போகும் தொழிலின் மார்க்கெட் நிலவரம், வருமானம் எப்படி, வங்கிக்கடனை எந்த வழியில் திருப்பிச் செலுத்துவது, கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய உத்திரவாதம்(சூரிட்டி) போன்ற விபரங்களை மனுவுடன் இணைக்க வேணடும். அதனை வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். அதன் பின்பு வங்கிக்கடன் மூன்று வருடத்திலிருந்து பத்து வருடத்திற்குள் செலுத்தினால் 13 சதவீதத்திலிருந்து 16 சதவீதம் வட்டியுடன் அசல் தொகையும் வசூலிக்கப்படும். கடன் தொகையினை ஒழுங்காக செலுத்தினால் கூடுதலாக கடன் பெறலாம். தொழில் தொடங்கி உற்பத்தி செய்யம் போது அந்த உற்பத்திப் பொருட்களை ஈடாக வைத்து கடன் பெறலாம். தொழிற்சாலை, கட்டிடம், எந்திரம், கச்சாப்பொருட்கள் என்று தனித்தனியாக கடன் பெறலாம். சிலர் கடன் வாங்கினால் வட்டி கட்டவேண்டும் அது இஸ்லாத்திற்கு எதிரானது என்று சொல்லலாம். அரசு வங்கிகளால் வழங்கப்படும் பணம் மக்களாகிய உங்களுடையது. அந்தப்பணத்தினை பணமதிப்பீடுக்கிணங்க கடனை கூடுதலாக செலுத்துகிறீர்கள். (உதாரணத்திற்கு சென்னை மண்ணடியில் ஒரு கிரவுண்ட் நிலத்தினை இந்த ஆண்டு  ஒருவர் ரூபாய் 80 லட்சத்திற்கு வாங்குகிறார் அந்த இடம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அப்போதைய மதிப்பீடுக்கிணங்க ரூபாய் ஒருகோடியே இருபது லட்சத்திற்கு விற்பதில்லையா? அது லாப நோக்கத்திற்காக விற்பதுதானே! ஆகவே நீங்கள் குற்ற உணர்வுடன் அரசு வங்கிளிடமோ அரசு நிறுவனங்களிடமோ கடனைப் பெறுவதினை நோக்க வேண்டாம். அது உங்கள் பணம் என்று உரினையுடன் நினைக்க வேண்டும்.

      இரண்டு வாரத்திற்கு முன்பு 35 வயது மிக்க திடகார்த்தமான ஒரு பெண் ‘நாலணா எட்டணா’ கொடுங்கள் என்று பிச்சை கேட்டுக் கொண்டிருந்தார் அவருடன் நடுத்தர பெண்களும் இருந்தார்கள். ஏன் இந்த நிலை என்று சமுதாய அமைப்பு சகோதரர்கள் சிந்திக்க வேண்டாமா? ‘டாஃபே’ என்ற டிராக்டர் நிறுவனம் நடத்தும் சிவசைலம் மகள் மல்லிகா சீனிவாசன் ஆயிரம் கோடி தொழில் அதிபதி என்று இருக்கும் போது நாம் ஏழை எளிய பெண்களுக்கு அரசு ஏற்படுத்தியிருக்கும் சுய வேலை திட்டத்திலாவது அவர்களுக்கு தொழில் தொடங்க ஏற்பாடு செய்யலாமே என்ற ஆதங்கம்  இருக்கத்தானே செய்யும்! இந்திய தாராள பொருளாதார கொள்கைக்கு பின்பு இந்திய பொருளாதார வளர்ச்சி எப்படியுள்ளது என்று அறிய பொருளாதார நிபுணர் டெண்டுல்கர்(கிரிக்;கட் வீரர் அல்ல) தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி கொடுத்த அறிக்கை பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அது என்ன? வறுமைக்கோட்டிற்கு கீழ்வாழும் மக்கள் தொகை 25 சதவீதத்திலிருந்து 2009ல் 37.2 சதவீதமாக அதிகரித்து விட்டது என்பது தான் அது. ஆகவே வறுமைக் கோட்டின் கீழ் துவண்டு கொண்டுள்ள பெண்களுக்கு சுய வேலை திட்டத்தில் தொழில் துவங்க வழி வகை செய்யலமே!.

சுயதொழில் எப்படி தொடங்குவது?

ஒரு கிராமத்தில் வசிக்கும் 12 முதல் 20 ஏழை பெண்கள் உறுப்பினர்களாக சேர்ந்து ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனப்பான்மையுடன் உருவாக்கப்பட்டதே சுயவேலைக் குழு.  வருமானம், கல்வியறிவு, வேலையின்மை, சொத்து அடிப்படையில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள 21 வயது முதல் 60வயது வரை பெண்கள் சுய உதவிக்குழு தொடங்கலாம். அப்படி தொடங்கப்பட்ட குழு அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தில்(என்.ஜி.ஓ) மூலம் மாவட்ட மகளிர் திட்டத்தில் இணையலாம். அந்தக் குழுவில் கல்வியறிவு பெற்ற ஒருவர் செயல் இயக்குனராகவும், விபரம் தெரிந்தவர் இயக்குனராகவும், மற்றும் இரண்டு பிரதிநிதிகள் கொண்ட செயற்குழுவினை ஏற்படுத்திக் கொள்ளலாம். அந்தக் குழு ஆரம்பித்து இரண்டு அல்லது மூன்று மாதங்களில் சங்க சேமிப்பில் உறுப்பினர்களுக்கு அவசர மருந்துச் செலவு, கல்விச் செலவு, தொழில் தொடங்க மூலதனம் குறைந்த காலத்தில் திருப்பிச் செலுத்தும் வகையில் ரூ500 லிருந்து கடன் வழங்கலாம். சிறப்பாக செயல்படும் குழுக்கழுக்கு வங்கிகளில் ரூபாய் ஐந்து லட்சம் வரை 12 சதவீத வட்டியில் கடன் பெறலாம். அரசுக் கடனில் ரூபாய் ஐந்து லட்சத்திற்கு ரூபாய் 1,75,00 மானியமாகப் பெறலாம். ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், பேரணிக்கு முஸ்லிம் பெண்களை அழைத்துச் செல்லும் சமுதாய இயக்கங்கள் ஏழைப் பெண்கள் கவுரவமாக வாழ மேற்கூறிய சுயவேலை தொழில் மையங்களை அவர்களுக்கு ஏற்படுத்தலாமே!

ஒருங்கிணைப்பு:

      முன்பெல்லாம் தொழில் தொடங்க ஒவ்வொரு அலுவலமாக அலைந்து அனுமதி வாங்க வேண்டியதிருந்தது. அதனை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் வழங்கச் செய்து எளிதாக்கியுள்ளார்கள். கீழ்கண்ட மையத்தில் மனு செய்தாலே உங்களுக்குத் தேவையான அனுமதி கிடைக்கும்:

செயல் துறைத் தலைவர்(வழிகாட்டுதல் குழு),
தமிழ்நாடு தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு,
19ஏ, ருக்மணி லட்சுமிபதி சாலை, எழும்பூர்,
சென்னை-600001
தொலைபேசி: 044-28553118, 285553866
  ஃபேக்ஸ்: 28588364

தொழில் நுணுக்கங்கள்:

தொழில் தொடங்கிய உடனே வெற்றியடைய முடியாது. திட்டமிட்டு சரியான இயக்கத்தில் தொடங்கினால் வெற்றி பெற முடியும். நமது வாடிக்கையாளர்களை நம்முடைய அனுகுமுறை வைத்தே தக்க வைக்க முடியும் என்பதிற்கு ஒரு உதாரணத்தினைச் சொல்லலாம் என நினைக்கிறேன். சென்னை ராதாக்கிருஷ்ண சாலையிலுள்ள ‘நீல்கிரிஸ் டிப்பார்ட்மெண்ட்’; ஸ்டோரில் நாங்கள் மாதாந்தர மளிகை சாமான்கள் 1991 ஆம் ஆண்டு முதல் வாங்குவது; வழக்கம். முதலில் ஒரு வயதானவர் அவரின் மூத்த மகன் கவனித்து வந்தார்கள். வாடிக்கையாளர்கள் மீது கவனம் வைத்து தொழில் செய்து வந்தார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அந்தப்பெரியவரின் இளைய மகன் மேற்பார்வையிட்டார். அவர் எம்.பி.ஏ படித்தவர் என்று கேள்விப் பட்டேன். வழக்கம் போல் வாங்கும் மளிகை சாமான்களுடன் வெண்டைக்காய் வற்றல் பாக்கட்டில் அடைத்ததினை வாங்கினேன். வீட்டில் வந்து தேவைக்கு பிரித்தபோது அது பூசனம் அடைந்திருந்தது. உடனே அதனை எடுத்துச் சென்று அந்த இளைஞரிடம் காட்டினேன், அவர் மாற்று வெண்டைக்காய் வற்றல் தரமறுத்து விவாதம் செய்தார். நானும் அதனை பெரிது படுத்தவில்லை. ஆனால் அந்த இளைஞர் வந்து மூன்று மாதத்திற்குள் வுhடிக்கையாளர்கள் கூட்டிம் கழுதை தேய்ந்து கட்டெறும்பானது. சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்த நிறுவனத்தினை அவர் அணுகு முறை மூலம் கொடுத்துவிட்டார். அதன் பின்பு வேறு நிர்வாகத்தினர் இப்போது நடத்துகின்றனர்.

உங்கள் தொழில் நிறுவன உற்பத்திப் பொருள்கள் போட்டி நிறுவனங்களை விட தரமானது என்று மற்றவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். தொழிலில் சுமுகமான  அணுகு முறையே வெற்றிக்கு வழிவகுக்கும.

சுய தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு ரூ. 5 லட்சம் கடன் – தமிழக அரசின் புதிய திட்டம்

சென்னை: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிதாக தொழில் தொடங்க 15 சதவீத மானியத்துடன் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கும் புதிய திட்டம் இந்த நிதியாண்டிலிருந்து செயல்படுத்தப்படுகிறது.



வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலும், சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையிலும் வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் புதிய திட்டம் நடப்பாண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உற்பத்தி அல்லது சேவை, வணிகம் சார்ந்த தொழில்களைத் தொடங்க விரும்பினால், அவர்களுக்கு 15 சதவீத மானியத்துடன் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை வங்கிகள் மூலமாக கடன் உதவி வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின் மூலம் ரூ.100 கோடியில் 10 ஆயிரம் பேருக்கு சுய வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

கூடுதலாக 15 தொழில்கள் சேர்ப்பு: தமிழ்நாடு [^] அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கொள்கை 2008-ன் படி, மானியம் பெற தகுதியான தொழில்கள் விவரம்:

பாப்கார்ன் மற்றும் ஐஸ்கிரீம் தயாரித்தல், கலப்பு உரம் தயாரித்தல், ஜவுளி ஆலைகள் (நூற்பாலை மற்றும் பின்னலாடை உள்பட), மாவு அரைவு தொழில், உணவு விடுதிகள், சமையல் எண்ணெய் மற்றும் கரைப்பான்கள் உபயோகித்து எண்ணெய் பிரித்தெடுத்தல், அரிசி ஆலை, வெல்லம் தயாரித்தல், போட்டோ எடுத்தல் மற்றும் கலர் போட்டோ தயாரித்தல், ஒளி அச்சு நகல் எடுத்தல், மின் சலவை தொழில், செங்கல் தொழில் (சிமென்ட் ஹாலோ பிளாக், இயந்திரங்கள் மற்றும் நிலக்கரி சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் செங்கல் தவிர), காபிக் கொட்டை வறுத்தல் மற்றும் அரைத்தல், கடிகாரம் பழுதுபார்த்தல், ஒளி மற்றும் ஒலி நாடா பதிவு செய்தல் ஆகிய தொழில்கள் மானியம் பெற தகுதியான தொழில்களாக மாற்றியமைக்கப்படும்.

இப்போது இந்தத் தொழில்கள் மானியம் பெற தகுதியற்ற தொழில்களின் பட்டியலில் உள்ளன.

வேலைவாய்ப்பு முகாம்கள்: தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் திறன் படைத்தோர் ஆகியோரை ஒருங்கிணைத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டத் தொழில் மையங்கள் மூலம் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும்.

புதிய நிறுவனங்கள் மானியங்களைப் பெற உற்பத்தி தொடங்கிய நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என உள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் சங்கங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, இந்த விண்ணப்ப கால அளவு 6 மாதத்திலிருந்து ஓர் ஆண்டாக உயர்த்தப்படும்… என்றார் அமைச்சர்.

டாம்கோ திட்டத்தின் கீழ் 200 ஆட்டோக்கள்

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழக (டாம்கோ) திட்டத்தின் கீழ், ஆட்டோ தொழில் கூட்டுறவு சங்கங்களின் மூலமாக சிறுபான்மையின உறுப்பினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் 200 ஆட்டோக்கள் கொள்முதல் செய்து வழங்கப்படும்.

4 comments:

  1. இக் கட்டுரையில் உள்ள சந்தேகங்களுக்கு யாரை தொடா்பு கொள்ள வேண்டும்

    இ மெயில் முகவாியுடன் பதிவிடவும்

    ReplyDelete
  2. என் கணவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்தபோது, என் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவோ அல்லது அவர்களுக்கு உணவளிக்கவோ எனக்கு எதுவுமே இல்லை, ஏனென்றால் நான் எங்களை கவனித்துக்கொள்ள ஒரு வேலை கிடைக்கவில்லை. விதவையின் விதவையின் திட்டத்தில் ஒரு விதவையின் கடனைப் பயன்படுத்துவதற்குப் பிறகு, என் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவும் எங்களுக்கு உணவு பரிமாறவும், மிக முக்கியமாக, எனக்கு ஒரு வேலை உருவாக்கவும் $ 15,000.00 கடன் வழங்கப்பட்டது. என் 2424 பேர் சொர்க்கத்தின் தேவதை. கடன் வருகைக்கு விண்ணப்பிப்பதற்கான உத்தரவாதமும் Guarantee24loans @ yahoo.com

    ReplyDelete
  3. 48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்

    நல்ல நாள்

    நீங்கள் ஒரு தொழிலதிபர் இருக்க வேண்டும், ஒரு திட்டம் தொடங்க அல்லது ஒரு அபார்ட்மெண்ட் வாங்க அல்லது நீங்கள் எந்த நிதி சிரமம் இருந்தால், உங்கள் உதவி இப்போது வருகிறது, நீங்கள் கடன் பெற முயற்சி இழந்துவிட்டாய், உங்கள் கனவுகள் இறக்க விட வேண்டாம், தொடர்பு திரு ஃப்ரெட் லாரி, ஒரு விரைவான மற்றும் நம்பகமான கடன்.

    கீழே கொடுக்கப்பட்டுள்ள கடன் வகைகளை நாங்கள் வழங்குகிறோம்:

    1 நிறுவனத்தின் கடன்
    2. வணிக கடன்
    3. குடியிருப்பு கடன்
    4. ஆட்டோ கடன்
    5. கார் கடன்

    நாங்கள் 3,000 வட்டி விகிதத்தில் 100,000.00 யூரோ இருந்து 500,000,000,000.00 வரை எங்களுக்கு உதவ தயாராக இருக்கும் தீவிர மற்றும் நேர்மையான வாடிக்கையாளர்களுக்கு கடன்களை வழங்குகிறோம்.

    எங்கள் மின்னஞ்சல் (fredlarryloanfirm@gmail.com) அல்லது (fredlarryloanfirm@hotmail.com) வழியாக விரைவாக எங்களை தொடர்பு கொள்க.

    Whatssap எண்: +2347061892843
    ஸ்கைப்: fredlarry12

    கையொப்பமிடப்பட்ட
    மேலாளர்
    திரு ஃப்ரெட் லாரி

    ReplyDelete
  4. 48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்

    நல்ல நாள்

    நீங்கள் ஒரு தொழிலதிபர் இருக்க வேண்டும், ஒரு திட்டம் தொடங்க அல்லது ஒரு அபார்ட்மெண்ட் வாங்க அல்லது நீங்கள் எந்த நிதி சிரமம் இருந்தால், உங்கள் உதவி இப்போது வருகிறது, நீங்கள் கடன் பெற முயற்சி இழந்துவிட்டாய், உங்கள் கனவுகள் இறக்க விட வேண்டாம், தொடர்பு திரு ஃப்ரெட் லாரி, ஒரு விரைவான மற்றும் நம்பகமான கடன்.

    கீழே கொடுக்கப்பட்டுள்ள கடன் வகைகளை நாங்கள் வழங்குகிறோம்:

    1 நிறுவனத்தின் கடன்
    2. வணிக கடன்
    3. குடியிருப்பு கடன்
    4. ஆட்டோ கடன்
    5. கார் கடன்

    நாங்கள் 3,000 வட்டி விகிதத்தில் 100,000.00 யூரோ இருந்து 500,000,000,000.00 வரை எங்களுக்கு உதவ தயாராக இருக்கும் தீவிர மற்றும் நேர்மையான வாடிக்கையாளர்களுக்கு கடன்களை வழங்குகிறோம்.

    எங்கள் மின்னஞ்சல் (fredlarryloanfirm@gmail.com) அல்லது (fredlarryloanfirm@hotmail.com) வழியாக விரைவாக எங்களை தொடர்பு கொள்க.

    Whatssap எண்: +2347061892843
    ஸ்கைப்: fredlarry12

    கையொப்பமிடப்பட்ட
    மேலாளர்
    திரு ஃப்ரெட் லாரி

    ReplyDelete